ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள்: தீவிரவாதியின் மகன் பகிரங்க பேட்டி!
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள்: தீவிரவாதியின் மகன் பகிரங்க பேட்டி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் என்பது தேசத்துக்கான அமைப்பு அல்ல. அது ஒரு மத அமைப்பு. ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள் என்றும், இதன் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து அமெரிக்கா சென்றதோடு, கிறிஸ்தவ மதத்தை தழுவி விட்டதாகவும் ஹமாஸ் தீவிரவாதியின் மகன் பகிரங்கமாக பேட்டி அளித்திருக்கிறார்.

பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்தவர் மொசாப் ஹசன் யூசப். ஹமாஸ் தீவிரவாத அமைப்பை நிறுவிய முக்கியத் தலைவர்களில் ஒருவரது மகன். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர், அங்குள்ள செய்திச் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.

அப்பேட்டியில், “பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்புக்கு தலைமை வகித்த குடும்பத்தில் பிறந்தேன். அந்த உலகத்தின் இளவரசராக வளர்க்கப்பட்டேன். ஹமாஸ் அமைப்பினரைப் பற்றி எனக்கு முழுவதுமாகத் தெரியும். ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீனர்கள் மீது எப்போதுமே உண்மையான அக்கறை இருந்ததில்லை.

கடந்த 1996-ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் மெகிடோ சிறையில் நுாற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை ஹமாஸ் அமைப்பினர் படுகொலை செய்தனர். அதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இச்சம்பவத்துக்குப் பிறகு ஹமாஸ் மீது எனக்கு வெறுப்பு உண்டானது. எனது சொந்த ரத்தமாக இருந்தாலும், அவர்களை விட்டுப் பிரிய முடிவெடுத்தேன்.

எனவே, பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சமடைந்தேன். இதன் பிறகு, கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, இன்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். ஆனால், தற்போது ஹமாஸ் தீவிரவாதிகள் இன்றைக்கு காஸாவின் ஆட்சியாளர்களாக உருவெடுத்திருக்கின்றனர். அவர்களது ரத்தவெறி இன்றுவரை அடங்கவில்லை.

மேலும், ஹமாஸ் என்பது தேசியத்துக்கான இயக்கம் அல்ல. அது, மத்திய கிழக்கிலும், உலகம் முழுதும் இஸ்லாமிய ஆளுகையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மத அமைப்பு. இவர்கள், தங்களது நோக்கத்தை அடைவதற்காக பாலஸ்தீனர்களை பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றனர்.

இந்த அமைப்பின் பின்னணியில் ஈரான் அரசு இருக்கிறது. அவர்கள்தான், ஹமாஸ் அமைப்பின் முதலாளி. ஆகவே, அவர்கள் சொல்லுக்கேற்ப ஹமாஸ் அமைப்பு செயல்படுகிறது” என்று கூறியிருக்கிறார். இவரது இந்தப் பேட்டி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: IsraelSupportHamas Founder son
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு திட்டங்கள்: முழுமையாகச் செயல்படுத்த பிரதமர் மோடி 6 மாதம் இலக்கு!

Next Post

எல்லையில் சீனாவின் கட்டமைப்புகள்: எச்சரிக்கும் பென்டகன்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies