கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறது! - வானதி சீனிவாசன் .
Sep 6, 2025, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறது! – வானதி சீனிவாசன் .

Web Desk by Web Desk
Oct 23, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 நடிகை கவுதமி கொடுத்த புகாரின் மீது இத்தனை நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த திமுக அரசு. அவர் கட்சியிலிருந்து விலகிய பிறகு அவரது புகாரை பதிவு செய்துள்ளது.  கட்சியில் இருந்து வெளியே வந்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெருக்கடி கொடுத்தார்களா? என்று தெரியவில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பூஜை செய்தார். மேலும் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் வாகனங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டன.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், கடந்த ஆண்டு இதே நாளில் கோவை ஈஸ்வரன் கோயில் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் கார் சிலிண்டர் வெடிகுண்டு நிகழ்வு நடத்தினார்.

கார் வெடிகுண்டு குறித்து என்ஐஏ வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றோம்.

கோவை மாநகரம் பாதுகாப்பிற்காக இன்று காலை கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், புகார் அளித்தாலும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் மாநில அரசின் மீது இருக்கிறது.

பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் ஏதேனும் சமூக வலைதளங்களும் கருத்து தெரிவித்தால் உடனடியாக காவல்துறை கைது செய்கிறார்கள்.

திமுகவினர் பிரதமர் மோடியை அவதூறாக பேசி வருகிறார்கள். ஆனால் திமுகவினரை கைது செய்யாமல் பாஜகவினரை கைது செய்து வருகின்றனர். திமுகவினர், பாஜக தொண்டர்களை தாக்குவது குறித்து தேசிய தலைமை குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பாஜக உறுப்பினர் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்கப்படும். திமுக அரசு பயங்கரவாதம் செய்வார்களை விட்டுவிட்டு அண்ணாமலை வீட்டில் அருகே இருந்த கொடி கம்பத்தை இரவோடு இரவாக அகற்றியது.

அப்போது நடிகை கவுதமி குறித்த கேள்வி, பதிலளித்தவர் “எனக்கு கவுதமி மீது அதீதமான அன்பு, பாசம், மரியாதை உண்டு. பாஜகவில் கடந்த ஒருசில ஆண்டுகளாக தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்மணி அவர்.

அவர் எந்தளவுக்கு கட்சிக்காக கடுமையாக உழைத்தார் என்பது எனக்கும் தெரியும். அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள கடிதத்தைப் பார்க்கும்போது எனக்கு கடுமையான மனவேதனை ஏற்படுகிறது.

பாஜக மகளிரணியில் இணைந்து பணியாற்றுவதற்காகக் கூட கவுதமியிடம் நான் ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தேன். தேசிய அளவில் என்னுடன் இணைந்து பணியாற்ற அழைத்தபோது, இல்லை மாநிலத்தில் நான் பணியாற்றுவதாக கவுதமி கூறிவிட்டார்.

தற்போது, எனக்கு மாநில அளவிலான பணிகளில் எனது வேலை குறைந்துவிட்டதாலும், அதிகமாக கவுதமியை பார்ப்பதற்கோ, பழகுவதற்வோ, பேசுவதற்கோ நேரம் இல்லாமல் இருந்தது. ஆனாலும், கடந்த மாதம்கூட அவருடன் பேசினேன். என்னுடைய தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர் கவுதமி.

தான் ஒரு சினிமா ஸ்டார். தனக்கு எப்போதும் முன்னுரிமை தரவேண்டும் என்று கவுதமி ஒருபோதும் யோசித்ததே இல்லை. அந்தளவுக்கு கட்சியின் அடிப்படை தொண்டர் போல பணியாற்றக்கூடியவர்.

அவரது ராஜினாமா கடிதம் எனக்குமே மனவேதனையை கொடுத்துள்ளது. கவுதமி எதிலும் சோர்ந்துபோகும் நபர் இல்லை. அனைத்து காரியங்களையும் தைரியமாக எடுத்து செய்யக்கூடியவர். தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட பெண்ணும்கூட.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாகக்கூட, ஒரு வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். முழுமையான தகவல்களைக் கொடுக்குமாறு நானும் பதில் அளித்திருந்தேன். ஆனால், அவருடைய அறிக்கையைப் பார்த்த உடன் எனக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கிறது. நிச்சயமாக கட்சிக்காரர்கள், சட்டத்துக்குப் புறம்பாக யாரையும் பாதுகாக்கப் போறது இல்லை.

கவுதமி இன்னமும்கூட மாநிலத் தலைவரிடமோ, என்னிடமோ அந்தப் பிரச்சினை குறித்து முழுமையாகக் கூறவில்லை.

அதேநேரம், ஒரு மாநில அரசு புகார் கொடுத்து இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. கவுதமி பாஜகவில் இருப்பதால், நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களா? ஏன் இத்தனை நாட்களாக அவருடைய புகாரைப் பதிவு செய்யவில்லை.

ஆனால், அவர் கட்சியிலிருந்து விலகிய பிறகு, புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து வெளியே வந்தால்தான் புகார் பதிவு செய்வேன் என்று நெருக்கடி கொடுத்தார்களா? என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே, இந்த விசயத்தைப் பொறுத்தவரை, மகளிரணி தலைவராக எனக்கும் ஒரு மனவேதனையை கொடுத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

Tags: vanathi srinivasan bjpkovaikovai bomb blast
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் பேட்டிங் !

Next Post

தோனியால் கூட முடியாததை ரோஹித் செய்துவிட்டார் !

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies