நாடு முழுவதும் ஸ்ரீராமர் திருக்கோவில் கும்பாபிஷேகம் காணும் வாய்ப்பு!
Jul 26, 2025, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் ஸ்ரீராமர் திருக்கோவில் கும்பாபிஷேகம் காணும் வாய்ப்பு!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தில் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீராம பிரானுக்கு மிக பிரம்மாண்ட திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பூமி பூஜை 2020 -ல் ஆகஸ்ட் மாதம் 5 -ம் தேதி பிரதமர் மோடி திருக்கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார்.

ரூ.2000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த கோவில், மொத்தம் 2.7 ஏக்கரில் கட்டப்பட உள்ளது. இதில், 57,400 சதுர அடியில் கோவில் கடிடமும், 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் இக்கோவில் அமைக்கப்பட உள்ளது.

மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2 -வது தளத்தில் 74 அறைகளும், 12 நுழைவு வாயில்கள் உள்ளன. மேலும், கோவிலில் விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா, சூரியன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் ஜொலிக்கின்றன. திருக்கோவில் கருவறை எண்கோண வடிவத்திலும், கர்ப்ப கிரகத்தில் உள்ள ராம் லல்லாவின் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் மின்னுகிறது.

திருக்கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலின் முன்பு பிரம்மாண்ட அனுமன் சிலை நம்மை வரவேற்கிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி 22 ம்- தேதி அயோத்தி ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிக பிரமாண்ட அளவில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அயோத்தியில் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஸ்ரீராம பிரான் நல்லெண்ணத்தை மேலும் பரப்பும் வகையில், ஆங்காங்கே ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், வாய்ப்பு உள்ளவர்கள் அயோத்திக்கு நேரடியாக சென்று ராம ஜென்ம பூமி கும்பாபிஷேகத்தை பார்க்கலாம். அங்கு செல்ல முடியாதவர்களுக்காக, நாடு முழுவதும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் திருக்கோவில்களில் ராம ஜென்ம பூமி கும்பாபிஷேகத்தை பார்வையிடவும் வழிபடவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதனால், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அனைவரும் ஸ்ரீராமர் திருக்கோவில் கும்பாபிஷேக்கத்தை காண வாய்ப்பு கிடைத்துள்ளது.

Tags: ayodhya ramar temple
ShareTweetSendShare
Previous Post

பாரதத்தின் வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!

Next Post

தேசியக் கொடி அவமதிப்பு – ஹெச்.ராஜா காட்டமான கேள்வி!

Related News

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies