பாடப்புத்தகங்களிலும் இனி "இந்தியா"வுக்கு பதில் "பாரத்": என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரை!
Jul 26, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடப்புத்தகங்களிலும் இனி “இந்தியா”வுக்கு பதில் “பாரத்”: என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரை!

Web Desk by Web Desk
Oct 25, 2023, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்திருக்கிறது.

பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயருக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயரை மாற்றும்படி பரிந்துரைத்திருக்கிறது.

மேலும், பாடப் புத்தகங்களில் ‘இந்து வெற்றி’ குறித்த விஷயங்களை முன்னிலைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, பண்டைய வரலாறு என்பதற்கு பதிலாக கிளாசிக்கல் வரலாற்றை அறிமுகப்படுத்தவும், அனைத்துப் பாடங்களிலும் இந்திய அறிவு முறையை அறிமுகப்படுத்தவும் குழுவினர் பரிந்துரைத்திருப்பதாக உயர்மட்ட குழுவின் தலைவர் சி.ஐ.ஐசக் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழ் மற்றும் பிரதமர் மோடியின் இந்தோனேஸிய பயணம் குறித்த அறிவிப்பு ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதில் ‘பாரத்’ என்று பயன்படுத்தப்பட்டது. அதேபோல, ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடியின் மேஜையில் இந்தியா என்பதற்கு பதில் ‘பாரத்’ என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், பள்ளி பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்ற பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உயர்மட்டக் குழுவின் தலைவர் சி.ஐ.ஐசக் கூறுகையில், “பள்ளிப் பாடத்திட்டத்தை திருத்தியமைக்க, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு, பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்றவும், பாடத்திட்டத்தில் பழங்கால வரலாறு என்று இருப்பதை ‘கிளாசிக்கல் ஹிஸ்டரி’யை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.

பாரதம் என்பது பழமையான பெயர். பாரதம் என்ற பெயரின் பயன்பாடு 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா என்ற சொல் கிழக்கிந்திய கம்பெனியால் நிறுவப்பட்டது. மேலும், 1757-ல் பிளாசி போருக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டது. எனவே, அனைத்து வகுப்புகளிலும் உள்ள மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் ‘பாரத்’ என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று குழு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது” என்றார்.

Tags: school textbooksIndia VS BharathNCERT
ShareTweetSendShare
Previous Post

நாளை தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்!

Next Post

அக்டோபர் 29-ஆம் தேதி: 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Related News

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – இளைஞரின் புகைப்படம் வெளியீடு!

ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை குளம் குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி!

ரிதன்யா வழக்கு – ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க ஆணை!

யூடியூப், இன்ஸ்டாவுக்கு செக் வைத்த மஸ்க் : 9 ஆண்டுக்குப் பின் மீண்டு(ம்) வருகிறது VINE!

18,000 அடி உயரத்தில் சரித்திர வெற்றி : கார்கில் போர் – 26வது வெற்றி தினம்!

சென்னை : பெண் ஐடி ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies