பாடப்புத்தகங்களிலும் இனி "இந்தியா"வுக்கு பதில் "பாரத்": என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரை!
Jan 14, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடப்புத்தகங்களிலும் இனி “இந்தியா”வுக்கு பதில் “பாரத்”: என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 25, 2023, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்திருக்கிறது.

பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயருக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயரை மாற்றும்படி பரிந்துரைத்திருக்கிறது.

மேலும், பாடப் புத்தகங்களில் ‘இந்து வெற்றி’ குறித்த விஷயங்களை முன்னிலைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, பண்டைய வரலாறு என்பதற்கு பதிலாக கிளாசிக்கல் வரலாற்றை அறிமுகப்படுத்தவும், அனைத்துப் பாடங்களிலும் இந்திய அறிவு முறையை அறிமுகப்படுத்தவும் குழுவினர் பரிந்துரைத்திருப்பதாக உயர்மட்ட குழுவின் தலைவர் சி.ஐ.ஐசக் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழ் மற்றும் பிரதமர் மோடியின் இந்தோனேஸிய பயணம் குறித்த அறிவிப்பு ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதில் ‘பாரத்’ என்று பயன்படுத்தப்பட்டது. அதேபோல, ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடியின் மேஜையில் இந்தியா என்பதற்கு பதில் ‘பாரத்’ என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், பள்ளி பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்ற பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உயர்மட்டக் குழுவின் தலைவர் சி.ஐ.ஐசக் கூறுகையில், “பள்ளிப் பாடத்திட்டத்தை திருத்தியமைக்க, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு, பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்றவும், பாடத்திட்டத்தில் பழங்கால வரலாறு என்று இருப்பதை ‘கிளாசிக்கல் ஹிஸ்டரி’யை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.

பாரதம் என்பது பழமையான பெயர். பாரதம் என்ற பெயரின் பயன்பாடு 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா என்ற சொல் கிழக்கிந்திய கம்பெனியால் நிறுவப்பட்டது. மேலும், 1757-ல் பிளாசி போருக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டது. எனவே, அனைத்து வகுப்புகளிலும் உள்ள மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் ‘பாரத்’ என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று குழு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது” என்றார்.

Tags: school textbooksIndia VS BharathNCERT
ShareTweetSendShare
Previous Post

நாளை தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்!

Next Post

அக்டோபர் 29-ஆம் தேதி: 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies