டெட் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்! - அண்ணாமலை.
Jan 14, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெட் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்! – அண்ணாமலை.

Murugesan M by Murugesan M
Oct 26, 2023, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீண்டும் டெட் தேர்வை நடத்தமாட்டோம் என்ற திமுக அரசு ! தன் தேர்தல் வாக்குறுதி எண் 177ஐ மறந்ததா?  எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் நாட்டிலே போற்றப்பட வேண்டிய ஆசிரியர்கள், செவிலியர்கள் எல்லாம் தமிழக அரசிடம், தங்கள் வாழ்க்கைக்காக, கையேந்திப் போராடும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு, அதில் சுமார் 24000 பேர் ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்ட பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு எஞ்சியுள்ள தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு, புதியவர்களுடன் மீண்டும் போட்டித் தேர்வு எழுதச் சொல்வது நியாயமற்றது. பிறகு, எந்த நியாயத்தில் திமுகவினர் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்? என்பது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது: ஆனால் 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை.

அரசாணை எண் 252 இன் அடிப்படையிலே சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போதும் அனைவருக்கும் பணி வழங்கப்படவில்லை. தீடீரென்று அரசாணை எண் 71 அடிப்படையிலே வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற முறை புகுத்தப்பட்டது. பின்னர் விலக்கப்பட்டது.

ஆனாலும், ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய டெட்டில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. இதற்கிடையே புதிய அரசாணை 149ஐ நடைமுறைப்படுத்த அரசு முயற்சிப்பது, நியாயமற்றது.

திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 177-ல் குறிப்பிட்டது போல தகுதி ஆசிரியர்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்பணி வழங்கப்படும் என்ற தங்கள் வாக்குறுதியை, நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது.

பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றபிறகும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிவோடு கேட்டு ஆவன செய்ய மனமில்லாத திமுக அரசு, பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணராமல், தங்கள் வாக்குறுதியையும் மதித்து நிறைவேற்றாமல், மாநில அரசு பாராமுகமாக இருப்பது துரதிஷ்டவசமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டெட் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க ஆவன செய்யவேண்டும் என்று பாஜக மீண்டும் வலியுறுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaidmk failsteacher
ShareTweetSendShare
Previous Post

சென்னை: ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி – நடக்குமா?

Next Post

அனுமதி மறுத்த காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு ! ஆர்எஸ்எஸ் முடிவு

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies