எல்லையில் ஊடுருவ முயற்சி: 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!
Oct 23, 2025, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லையில் ஊடுருவ முயற்சி: 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கும் நிலையில், எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில ஏ.டி.ஜி.பி. தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அம்மாநிலத்தில் தீவிரவாதத்தை வேரறுக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தீவிரவாதிகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினரும், இராணுவ வீரர்களும் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த மோதலில், இராணுவ கர்னல், மேஜர், காவல்துறை டி.எஸ்.பி. மற்றும் இராணுவ வீரர் என 4 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிறகு, இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தீவிரவாதிகளை தேடித் தேடி வேட்டையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை மூலம் காவல்துறையினருக்குத் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குப்வாரா மாவட்டம் மச்சல் செக்டார் கும்காடி பகுதியில் இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கூட்டு நடவடிக்கைக் குழுவினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில், 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலைப்பட்டனர்.

மேற்கண்ட தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவுபெற்ற லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தீவிரவாதிகளிடம் இருந்து, ஏ.கே. ரக துப்பாக்கிகள் 2 மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “குப்வாரா மாவட்டம் மச்சல் செக்டாரில் இந்திய எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்தது. எனவே, எல்லை வேலி அருகே இராணுவ வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முன்னதாக 2 தீவிரவாதிகளும், பிறகு 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதை காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. உறுதிப்படுத்தி இருக்கிறார்” என்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இந்த ஆண்டு 46 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 37 பேர் வெளிநாட்டு தீவிரவாதிகள் என்றும், 9 பேர் உள்ளூர்வாசிகள் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் தீவிரவாதிகளை விட வெளிநாட்டுத் தீவிரவாதிகள் 4 மடங்கு அதிகமாக கொல்லப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: encounterjammu kashmirkilled5 terrorist
ShareTweetSendShare
Previous Post

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

பிரதமர் பற்றி அவதூறு: பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Related News

டெல்டா மாவட்ட வளர்ச்சிக்கு முதல்வர் என்ன செய்தார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரணம்!

புதுக்கோட்டையில் முழு கொள்ளவை எட்டிய அடப்பன்குளம் – நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி!

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies