எல்லையில் ஊடுருவ முயற்சி: 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லையில் ஊடுருவ முயற்சி: 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 27, 2023, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கும் நிலையில், எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில ஏ.டி.ஜி.பி. தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அம்மாநிலத்தில் தீவிரவாதத்தை வேரறுக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தீவிரவாதிகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினரும், இராணுவ வீரர்களும் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த மோதலில், இராணுவ கர்னல், மேஜர், காவல்துறை டி.எஸ்.பி. மற்றும் இராணுவ வீரர் என 4 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிறகு, இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தீவிரவாதிகளை தேடித் தேடி வேட்டையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை மூலம் காவல்துறையினருக்குத் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குப்வாரா மாவட்டம் மச்சல் செக்டார் கும்காடி பகுதியில் இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கூட்டு நடவடிக்கைக் குழுவினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில், 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலைப்பட்டனர்.

மேற்கண்ட தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவுபெற்ற லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தீவிரவாதிகளிடம் இருந்து, ஏ.கே. ரக துப்பாக்கிகள் 2 மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “குப்வாரா மாவட்டம் மச்சல் செக்டாரில் இந்திய எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்தது. எனவே, எல்லை வேலி அருகே இராணுவ வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முன்னதாக 2 தீவிரவாதிகளும், பிறகு 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதை காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. உறுதிப்படுத்தி இருக்கிறார்” என்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இந்த ஆண்டு 46 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 37 பேர் வெளிநாட்டு தீவிரவாதிகள் என்றும், 9 பேர் உள்ளூர்வாசிகள் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் தீவிரவாதிகளை விட வெளிநாட்டுத் தீவிரவாதிகள் 4 மடங்கு அதிகமாக கொல்லப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: encounterjammu kashmirkilled5 terrorist
ShareTweetSendShare
Previous Post

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

பிரதமர் பற்றி அவதூறு: பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies