இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் 2 முக்கியத் தளபதிகள் "அவுட்"!
Jan 14, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் 2 முக்கியத் தளபதிகள் “அவுட்”!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் விமானப்படைத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, 22-வது நாளாக இன்றுவரை இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும், காஸா தரப்பில் 311 தீவிரவாதிகள் உட்பட 8,000 பேரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், தரை வழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கிறது. அந்த வகையில், நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் விமானப்படைத் தளபதி இஸ்லாம் அபு ருக்பே, கடற்படைத் தளபதி ரதேப் அபு சாஹிபான் ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இவர்களில் இஸ்லாம் அபு ருக்பே, ஹமாஸின் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள், பாரா கிளைடர்கள், வான்வழி கண்டறிதல் அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு ஆகியவற்றை மேற்பார்வையிடும் தளபதியாக இருந்தவர்.

மேலும், அக்டோபர் 7-ம் தேதி தாக்குதலின்போது, தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைய பாரா கிளைடர்களைப் பயன்படுத்திய தீவிரவாதிகளை வழிநடத்தியதிலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பு நிலைகள் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதிலும் முக்கியப் பங்கு வகித்தவர் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

அதேபோல, ரதேப் அபு சாஹின், அக்டோபர் 7-ம் தேதி ஜிக்கிம் கடற்கரைப் பகுதி வழியாக ஊடுருவிய தீவிரவாதக் குழுவிற்கு தலைமை வகித்தவர் என்று தெரிவித்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் ரியர் அட்மிரல் டேனியஸ் ஹகாரி, இஸ்ரேலின் தரைப்படைகள் ஸ்ட்ரிப் பகுதியில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. காலாட்படை, கவச, பொறியியல் மற்றும் பீரங்கி படைகள் நடவடிக்கையில் பங்கேற்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஒரே இரவில் நடந்த இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 2 ஹமாஸ் கமாண்டர்கள் கொல்லப்பட்டிருப்பது, ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் போரின் கட்டங்களில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

Tags: attackkilledIsrael2 hamas commander
ShareTweetSendShare
Previous Post

11 பதக்கங்களுடன் நிறைவடைந்த பாரா ஆசிய விளையாட்டு !

Next Post

தங்கம் வென்ற வீரர் வாழ்த்திய பிரதமர் !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies