ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண் நாடு திரும்பினார்!
Jan 14, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண் நாடு திரும்பினார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண், சிகாகோவுக்கு திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, ஏராளமானோரை சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாகவும் பிடித்துச் சென்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் ஆகியோரும் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் விடுமுறையைக் கழிப்பதற்காக, இஸ்ரேலின் நஹஸ் ஓஸில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்தனர்.

இதையடுத்து, கத்தார் மற்றும் எகிப்து உதவியுடன் அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 21-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பிணைக் கைதிகளான ஜூடித் டாயா ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் ஆகியோரை விடுவித்தனர். பின்னர், இருவரும் இஸ்ரேல் திரும்பினர்.

இந்த நிலையில், நடாலி ஷோஷனா ரானன் இஸ்ரேலில் இருந்து சொந்த நாடான அமெரிக்காவுக்குத் திரும்பி இருக்கிறார். சிகாகோ நகரிலுள்ள தனது வீட்டிற்கு நடாலி சென்றடைந்ததை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இதுகுறித்து மத்திய மேற்கு இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் கோஹன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாங்கள் நடாலி திரும்பியதைக் கொண்டாடும் அதேவேளையில், காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட 239 பிணைக் கைதிகள் குறித்தும் கவலைகொள்கிறோம். அதேசமயம், ஜூடித் தனது மகளுடன் அமெரிக்கா திரும்பவில்லை. இன்னும் இஸ்ரேலில் குடும்பத்துடன் இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ​​அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், கத்தார் அரசாங்கத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். “கத்தார் அரசாங்கத்தின் மிக முக்கியமான உதவிக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த வாரம் நான் இஸ்ரேலில் இருந்தபோது, ​​ஹமாஸ் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் அமெரிக்க குடிமக்களின் குடும்பங்களைச் சந்தித்தேன்” என்று கூறினார்.

Tags: American ladyHamas
ShareTweetSendShare
Previous Post

இலங்கையின் கடல் வளங்களை ஆராய தொடங்கிய சீனாவின் அதிநவீன கப்பல்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் பேட்டிங் தேர்வு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies