ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண் நாடு திரும்பினார்!
Sep 10, 2025, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண் நாடு திரும்பினார்!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண், சிகாகோவுக்கு திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, ஏராளமானோரை சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாகவும் பிடித்துச் சென்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் ஆகியோரும் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் விடுமுறையைக் கழிப்பதற்காக, இஸ்ரேலின் நஹஸ் ஓஸில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்தனர்.

இதையடுத்து, கத்தார் மற்றும் எகிப்து உதவியுடன் அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 21-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பிணைக் கைதிகளான ஜூடித் டாயா ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் ஆகியோரை விடுவித்தனர். பின்னர், இருவரும் இஸ்ரேல் திரும்பினர்.

இந்த நிலையில், நடாலி ஷோஷனா ரானன் இஸ்ரேலில் இருந்து சொந்த நாடான அமெரிக்காவுக்குத் திரும்பி இருக்கிறார். சிகாகோ நகரிலுள்ள தனது வீட்டிற்கு நடாலி சென்றடைந்ததை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இதுகுறித்து மத்திய மேற்கு இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் கோஹன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாங்கள் நடாலி திரும்பியதைக் கொண்டாடும் அதேவேளையில், காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட 239 பிணைக் கைதிகள் குறித்தும் கவலைகொள்கிறோம். அதேசமயம், ஜூடித் தனது மகளுடன் அமெரிக்கா திரும்பவில்லை. இன்னும் இஸ்ரேலில் குடும்பத்துடன் இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ​​அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், கத்தார் அரசாங்கத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். “கத்தார் அரசாங்கத்தின் மிக முக்கியமான உதவிக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த வாரம் நான் இஸ்ரேலில் இருந்தபோது, ​​ஹமாஸ் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் அமெரிக்க குடிமக்களின் குடும்பங்களைச் சந்தித்தேன்” என்று கூறினார்.

Tags: HamasAmerican lady
ShareTweetSendShare
Previous Post

இலங்கையின் கடல் வளங்களை ஆராய தொடங்கிய சீனாவின் அதிநவீன கப்பல்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் பேட்டிங் தேர்வு!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies