ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண் நாடு திரும்பினார்!
Mar 15, 2026, 11:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண் நாடு திரும்பினார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண், சிகாகோவுக்கு திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, ஏராளமானோரை சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாகவும் பிடித்துச் சென்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் ஆகியோரும் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் விடுமுறையைக் கழிப்பதற்காக, இஸ்ரேலின் நஹஸ் ஓஸில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்தனர்.

இதையடுத்து, கத்தார் மற்றும் எகிப்து உதவியுடன் அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 21-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பிணைக் கைதிகளான ஜூடித் டாயா ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் ஆகியோரை விடுவித்தனர். பின்னர், இருவரும் இஸ்ரேல் திரும்பினர்.

இந்த நிலையில், நடாலி ஷோஷனா ரானன் இஸ்ரேலில் இருந்து சொந்த நாடான அமெரிக்காவுக்குத் திரும்பி இருக்கிறார். சிகாகோ நகரிலுள்ள தனது வீட்டிற்கு நடாலி சென்றடைந்ததை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இதுகுறித்து மத்திய மேற்கு இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் கோஹன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாங்கள் நடாலி திரும்பியதைக் கொண்டாடும் அதேவேளையில், காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட 239 பிணைக் கைதிகள் குறித்தும் கவலைகொள்கிறோம். அதேசமயம், ஜூடித் தனது மகளுடன் அமெரிக்கா திரும்பவில்லை. இன்னும் இஸ்ரேலில் குடும்பத்துடன் இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ​​அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், கத்தார் அரசாங்கத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். “கத்தார் அரசாங்கத்தின் மிக முக்கியமான உதவிக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த வாரம் நான் இஸ்ரேலில் இருந்தபோது, ​​ஹமாஸ் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் அமெரிக்க குடிமக்களின் குடும்பங்களைச் சந்தித்தேன்” என்று கூறினார்.

Tags: HamasAmerican lady
ShareTweetSendShare
Previous Post

இலங்கையின் கடல் வளங்களை ஆராய தொடங்கிய சீனாவின் அதிநவீன கப்பல்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் பேட்டிங் தேர்வு!

Related News

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies