ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண் நாடு திரும்பினார்!
Jul 26, 2025, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண் நாடு திரும்பினார்!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கப் பெண், சிகாகோவுக்கு திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, ஏராளமானோரை சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாகவும் பிடித்துச் சென்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் ஆகியோரும் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் விடுமுறையைக் கழிப்பதற்காக, இஸ்ரேலின் நஹஸ் ஓஸில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்தனர்.

இதையடுத்து, கத்தார் மற்றும் எகிப்து உதவியுடன் அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 21-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பிணைக் கைதிகளான ஜூடித் டாயா ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் ஆகியோரை விடுவித்தனர். பின்னர், இருவரும் இஸ்ரேல் திரும்பினர்.

இந்த நிலையில், நடாலி ஷோஷனா ரானன் இஸ்ரேலில் இருந்து சொந்த நாடான அமெரிக்காவுக்குத் திரும்பி இருக்கிறார். சிகாகோ நகரிலுள்ள தனது வீட்டிற்கு நடாலி சென்றடைந்ததை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இதுகுறித்து மத்திய மேற்கு இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் கோஹன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாங்கள் நடாலி திரும்பியதைக் கொண்டாடும் அதேவேளையில், காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட 239 பிணைக் கைதிகள் குறித்தும் கவலைகொள்கிறோம். அதேசமயம், ஜூடித் தனது மகளுடன் அமெரிக்கா திரும்பவில்லை. இன்னும் இஸ்ரேலில் குடும்பத்துடன் இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ​​அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், கத்தார் அரசாங்கத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். “கத்தார் அரசாங்கத்தின் மிக முக்கியமான உதவிக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த வாரம் நான் இஸ்ரேலில் இருந்தபோது, ​​ஹமாஸ் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் அமெரிக்க குடிமக்களின் குடும்பங்களைச் சந்தித்தேன்” என்று கூறினார்.

Tags: HamasAmerican lady
ShareTweetSendShare
Previous Post

இலங்கையின் கடல் வளங்களை ஆராய தொடங்கிய சீனாவின் அதிநவீன கப்பல்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் பேட்டிங் தேர்வு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies