சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், இடையிடையே, கனமழை பெய்து வருகிறது. சென்னையில் குறிப்பாக, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அசோக்பில்லர், கோயம்பேடு, போரூர், தி.நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று, சென்னை புறநகர்ப் பகுதிகளான மதுரவாயல், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.