ஜம்மு-காஷ்மீரில் 1.08 கிலோமீட்டர் நீளமுள்ள 4 பாதைகளுடன் ராம்பன் பாலம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில், 1.08 கிலோமீட்டர் நீளமுள்ள 4 பாதைகளுடன் குறிப்பிடத்தக்க சாதனையாக ராம்பன் பாதையை வெற்றிகரமாக முடித்துள்ளோம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
📍In Jammu and Kashmir, we have 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥𝐥𝐲 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐑𝐚𝐦𝐛𝐚𝐧 𝐕𝐢𝐚𝐝𝐮𝐜𝐭, a remarkable feat spanning a length of 𝟏.𝟎𝟖 𝐤𝐢𝐥𝐨𝐦𝐞𝐭𝐞𝐫𝐬 𝐰𝐢𝐭𝐡 𝟒 𝐥𝐚𝐧𝐞𝐬. The project, 𝐛𝐮𝐢𝐥𝐭 𝐚𝐭 𝐚… pic.twitter.com/iIJsFhoRyL
— Nitin Gadkari (@nitin_gadkari) November 1, 2023
ரூ.328 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் தேசிய நெடுஞ்சாலை-44-ன் உதம்பூர்-ராம்பன் பிரிவில் அமைந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீருக்கு சிறந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்று கூறினார். இந்த மகத்தான சாதனை பிராந்தியப் பொருளாதார வளத்தை ஊக்குவிப்பதோடு, ஓர் உயர்நிலை சுற்றுலாத் தலமாக அதன் ஈர்ப்பை அதிகரிக்கிறது என்று கூறினார்.