உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா: இராஜ்நாத் சிங்!
Oct 26, 2025, 05:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா: இராஜ்நாத் சிங்!

Web Desk by Web Desk
Nov 3, 2023, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் மாறும் என்று மத்திய இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இந்தியா உற்பத்தி கண்காட்சி நேற்று தொடங்கியது.
கண்காட்சியைத் தொடங்கிவைத்து, மத்திய இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் கூறியதாவது: “சிறுதொழிலகள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. மோட்டார் எவ்வளவு வேகமாக இயங்குகிறதோ, அவ்வளவு வேகத்தில் பொருளாதார வாகனம் நகர்கிறது. சிறு தொழில்கள் சமூகம், பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது. பெரிய தொழில்களை விட, சிறிய தொழில்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. பெரிய தொழிற்சாலைகளும், நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றன. சிறிய தொழில்களை புறக்கணித்தால், நாடு முன்னேற்றம் அடையாது. கிராமங்கள், நகரங்களில் பல சிறிய தொழில்கள் இருந்தன. அவை மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தன.

பண்டைய காலத்தில் இந்தியாவில் பெரிய அளவில் தொழில்கள் இல்லை. ஜவுளி, இரும்பு, கப்பல் கட்டும் தொழிலால், இந்தியா உலகம் முழுவதும் அறியப்பட்டது. மூன்று தொழில்களும் நம்முடைய தொழில் திறமையை வெளிப்படுத்தின. பெரிய தொழில்களை விட, சிறிய தொழில்களில் எளிதில் மாற்றங்கள் செய்யலாம். பல நேரங்களில் புதிய தயாரிப்புகளை, சிறு தொழில் நிறுவனங்கள் தான் கண்டுபிடிக்கின்றன. சிறிய தொழில்கள் மீது கவனம் செலுத்துவது, கனரக தொழில்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் இல்லை.

பொருளாதாரத்தின் கருத்தை, புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. சுயநல நோக்கத்திற்கும், லாப நோக்கத்திற்கு இடையில், நேர்த்தியான கோடு உள்ளது. லாபம் என்பது சுயநலம் அல்ல; நியாயமான பலன். கொரோனா காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்காக, மத்திய அரசு கூடுதல் கடன் வழங்கியது. ஆயுத இறக்குமதி கட்டுப்பாட்டுகளை விதித்த, முதல் அரசு நாங்கள் தான். ஐந்து நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை வெளியிட்டோம். அதன்கீழ் 509 உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றின் உற்பத்தி தற்போது இந்தியாவில் நடக்கிறது. பாதுகாப்பு, பொது நிறுவனங்களுக்காக நான்கு நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல், பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன் கீழ் 4 ஆயிரத்து 66 பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். தொழில்துறைக்கு இலாபம், நஷ்ட அறிக்கையின் மீது எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே பொறுப்பு நாட்டின் மீதும் உள்ளது. கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் தொழில்கள் முன்னேறினால், வரும் காலத்தில் இந்தியா தன்னிறைவு பெற்று, உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும்” என்று தெரிவித்தார்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பையில் இந்திய அணி அசத்தல் – பாரத பிரதமர் !

Next Post

 ஐ.டி. ரெய்டில் சிக்கிய பிரபல தொழில் அதிபர்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies