ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை: பா.ஜ.க. எம்.பி. தாக்கு!
Jul 26, 2025, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை: பா.ஜ.க. எம்.பி. தாக்கு!

Web Desk by Web Desk
Nov 3, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப் பாடம் செய்வதில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பால் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், “நான் நேற்று சிந்த்வாராவுக்குச் சென்றிருந்தேன். அங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் சிக்கலில் இருக்கிறார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அங்கு அவர் தோற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கருத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை என்பது தெளிவாகிறது. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி இன்று பேசுகிறார். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங் உள்ளிட்டோரும் பேசுகின்றனர்.

ராகுல் காந்தியின் அரசியல் எப்படி என்றால், யாராவது ஒரு விவகாரத்தை அவருக்குக் கொடுத்து விட்டால் போதும், அதையே பிடித்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். முதலில் ரஃபேல் விவகாரம் கிடைத்தது. பிறகு சாவர்க்கர், இப்போது ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு சீட்டை நிதீஷ் குமார் கொடுத்திருக்கிறார்.

ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை என்று மக்களவையில் கூறினேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை. பீகாரில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் பல தவறுகள் இருக்கின்றன. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக மிகவும் பின்தங்கிய மக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் முதல்முறையாக முஸ்லீம்கள் முற்படுத்தப்பட்ட, பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கியவர்களாக கருதப்பட்டிருக்கிறார்கள். நான் எனது கட்சியைப் பற்றி பெருமைப்படுகிறேன். காரணம், 80 பா.ஜ.க. எம்.பி.க்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.

பா.ஜ.க.வில் அதிக எண்ணிக்கையிலான ஓ.பி.சி. எம்.எல்.ஏ.க்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் இருக்கிறார்கள். பிரதமர் மோடியே  ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்தான். தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கும் திரௌபதி முர்மு முதல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவராவார். அதேபோல, ஏற்கெனவே குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்” என்றார்.

Tags: attackrahul gandhiRavi Shankar Prasadbjp mp
ShareTweetSendShare
Previous Post

மொபிலிட்டி மற்றும் இடம்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தம்!

Next Post

தேசிய விளையாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர் !

Related News

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – இளைஞரின் புகைப்படம் வெளியீடு!

ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை குளம் குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி!

ரிதன்யா வழக்கு – ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க ஆணை!

யூடியூப், இன்ஸ்டாவுக்கு செக் வைத்த மஸ்க் : 9 ஆண்டுக்குப் பின் மீண்டு(ம்) வருகிறது VINE!

18,000 அடி உயரத்தில் சரித்திர வெற்றி : கார்கில் போர் – 26வது வெற்றி தினம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies