ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை: பா.ஜ.க. எம்.பி. தாக்கு!
Oct 26, 2025, 03:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை: பா.ஜ.க. எம்.பி. தாக்கு!

Web Desk by Web Desk
Nov 3, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப் பாடம் செய்வதில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பால் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், “நான் நேற்று சிந்த்வாராவுக்குச் சென்றிருந்தேன். அங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் சிக்கலில் இருக்கிறார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அங்கு அவர் தோற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கருத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை என்பது தெளிவாகிறது. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி இன்று பேசுகிறார். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங் உள்ளிட்டோரும் பேசுகின்றனர்.

ராகுல் காந்தியின் அரசியல் எப்படி என்றால், யாராவது ஒரு விவகாரத்தை அவருக்குக் கொடுத்து விட்டால் போதும், அதையே பிடித்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். முதலில் ரஃபேல் விவகாரம் கிடைத்தது. பிறகு சாவர்க்கர், இப்போது ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு சீட்டை நிதீஷ் குமார் கொடுத்திருக்கிறார்.

ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை என்று மக்களவையில் கூறினேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்வதில்லை. பீகாரில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் பல தவறுகள் இருக்கின்றன. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக மிகவும் பின்தங்கிய மக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் முதல்முறையாக முஸ்லீம்கள் முற்படுத்தப்பட்ட, பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கியவர்களாக கருதப்பட்டிருக்கிறார்கள். நான் எனது கட்சியைப் பற்றி பெருமைப்படுகிறேன். காரணம், 80 பா.ஜ.க. எம்.பி.க்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.

பா.ஜ.க.வில் அதிக எண்ணிக்கையிலான ஓ.பி.சி. எம்.எல்.ஏ.க்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் இருக்கிறார்கள். பிரதமர் மோடியே  ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்தான். தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கும் திரௌபதி முர்மு முதல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவராவார். அதேபோல, ஏற்கெனவே குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்” என்றார்.

Tags: rahul gandhiRavi Shankar Prasadbjp mpattack
ShareTweetSendShare
Previous Post

மொபிலிட்டி மற்றும் இடம்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தம்!

Next Post

தேசிய விளையாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர் !

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies