ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. நியூசிலாந்து அணி 4 தொடர் வெற்றி, ஹாட்ரிக் தோல்வி என 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டுப் போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்கிற சூழலில் நியூசிலாந்து அணி உள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.
பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக இருந்து வரும் பாகிஸ்தான் பீல்டிங்கில் ஏராமான ரன்களை எதிரணிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அணியாக உள்ளது. எனவே பீல்டிங்கில் மிகவும் கவனமாக செயல்பட்டால் எதிரணியை கட்டுப்படுத்தும் அனைத்து அம்சங்களும் கொண்ட அணியாகவே பாகிஸ்தான் உள்ளது.
பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருந்து வரும் பெங்களுரு மைதானத்தில் நடைபெற்றிருக்கும் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பேட்ஸ்மேன்களும், இரண்டாவது போட்டியில் பவுலர்களும் சாதித்துள்ளனர்.
பொதுவாக செம்மண் ஆடுகளம் ஸ்பின் பவுலர்களுக்கு நன்கு கை கொடுக்கும். ஆனால் பெங்களுருவில் செம்மண் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் சாதித்துள்ளனர்.
எனவே இன்றையப் போட்டியில் பயன்படுத்தப்பட இருக்கும் ஆடுகளத்தை பொறுத்து பேட்ஸ்மேன், பவுலர்களில் யார் ஜொலிப்பார்கள் என தெரியவரும்.
மேலும் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் நியூசிலாந்து அணி 52% வெற்றி பெரும் என்றும் பாகிஸ்தான் அணி 42% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.