ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்கிறது.
நியூசிலாந்து அணியின் வீரர்கள் :
டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (தலைவர்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட்.
பாகிஸ்தான் அணியின் வீரர்கள் :
அப்துல்லா ஷபீக், ஃபகார் ஜமான், பாபர் ஆசம் (தலைவர்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்.