ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் முதல் பெங்களுருவில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இரண்டாம் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் :
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.
இங்கிலாந்து அணியின் வீரர்கள் :
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்