ஆட்சியில் இருக்கும்போதே சூதாட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள்: ஸ்மிருதி இரானி தாக்கு!
Jan 14, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சியில் இருக்கும்போதே சூதாட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள்: ஸ்மிருதி இரானி தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு சட்டவிரோத சூதாட்டம் மூலம் வாங்கிய பணத்தை பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்திருக்கிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கியப் பிரமுகர்கள், சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக அதிகளவில் பணம் கொடுத்து அனுப்பியதாக உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, துபாயில் இருந்து வந்த அசிம் தாஸ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 5.39 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி விசாரணையின்போது, மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கியப் பிரமுகர்கள் ‘பாகல்’ என்ற பெயருடைய அரசியல்வாதியிடம் ஒப்படைக்கும்படி கூறி மேற்கண்ட பணத்தைக் கொடுத்து அனுப்பியதாக அசிம் தாஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் நான் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் சூதாட்டத்திற்கு பந்தயம் கட்டுகின்றனர்.

அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் நேற்று வெளிவந்தன. அசிம் தாஸ் என்ற நபரிடம் இருந்து 5.30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காங்கிரஸின் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க உத்தரவிடப்பட்டதாக அசிம் தாஸ் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.

அப்படியானால், ராய்ப்பூர் சென்று பாகலுக்கு தேர்தல் செலவாக பணம் கொடுக்குமாறு அசிம் தாஸை சூதாட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் அனுப்பி வைத்தது உண்மையா? மகாதேவ் ஆன்லைன் புத்தகத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் உயர் பதவியில் இருக்கும் ஷுபம் சோனி என்பவரும் தனது நிறுவனத்தில் அசிம் தாஸ் பணிபுரிவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சூதாட்ட நிறுவத்தின் உதவியுடன் சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் போராடுகிறது. காங்கிரஸ் பிரசாரத்திற்கு சட்டவிரோத சூதாட்டம் மூலம் வாங்கிய பணத்தை பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.

Tags: Smriti IraniCM Bupesh Bahel
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு வியாபாரிகளை வஞ்சிக்கும் திமுக அரசு : அண்ணாமலை

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா பேட்டிங் !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies