பட்டாசு வியாபாரிகளை வஞ்சிக்கும் திமுக அரசு : அண்ணாமலை
Jun 2, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டாசு வியாபாரிகளை வஞ்சிக்கும் திமுக அரசு : அண்ணாமலை

Web Desk by Web Desk
Nov 4, 2023, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

பண்டிகைக் கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து, உடனடியாக விண்ணப்பித்துள்ள பட்டாசு வியாபாரிகள் அனைவருக்கும் உரிமம் வழங்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“அனைத்துத் தரப்பு பொதுமக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்கு, இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில், பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோருக்கு, இன்னும் பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று விதிமுறை கொண்டு வந்த திமுக அரசு, அதற்கான கட்டணம் ரூபாய் 600 வசூலித்து விட்டு, உரிமம் வழங்காமல் தமிழகம் முழுவதும் சுமார் 7,000 சிறு வியாபாரிகளை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. உரிமம் கிடைக்காததால் ஆலைகளிலிருந்து பட்டாசுகளைக் கொள்முதல் செய்ய முடியாமல் சிறு வணிகர்களும், பட்டாசு ஆலைகளும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

விற்பனை உரிமம் வழங்காமல் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மட்டும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகளை ஆலைகளில் முடங்க வைத்திருப்பது, திமுக அரசின் உண்மையான நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது.

பல கோடி செலவு செய்து, வீண் விளம்பரங்களுக்கு முன்னுரிமை கொடுத்துத் திட்டம் தீட்டும் திமுக, மக்களின் பண்டிகைக் கால வாழ்வாதாரத்தை, மெத்தனப் போக்கில் அணுகுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பட்டாசு விற்பனை உரிமம் பெற ஆகும் காலதாமதம், பெரும் விற்பனையாளர்களுக்கு மட்டுமே பலன் தருவதோடு, பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில்,கடும் விலையுயர்வையும் பொதுமக்கள் எதிர்கொள்ளக் காரணமாக இருக்கும் என்பதால், திமுகவினர் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் தற்போது பட்டாசு விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்களோ என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது.

திமுகவினர் வரலாறு அப்படி இருப்பதால், பொதுமக்களின் இந்தக் கேள்வியைப் புறம்தள்ளி விட முடியாது.
முந்தைய ஆண்டுகளில், காவல்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய மூன்று துறைகளில் அனுமதிக் கடிதம் பெற்றாலே உரிமம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கூடுதலாக, தாசில்தாரிடமும், தனிநபர் ஒருவரிடமும், மொத்தம் ஐந்து அனுமதிக் கடிதங்களை வியாபாரிகள் பெற வேண்டும் என திமுக அரசு கூறியிருக்கிறது. இவற்றில் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, உரிமம் வழங்குவதைத் தட்டிக் கழிக்கிறது திமுக அரசு. இதனால், சிறு வியாபாரிகளே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உரிமம் வழங்க, தேவையின்றி காலம் தாழ்த்துவது முறைகேட்டிற்கே வழிவகுக்கும். திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கு, பொதுமக்கள் மத்தியில், தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தையே பாதிக்கும். அதுதான் திமுகவின் நோக்கமாகவும் தெரிகிறது.

பண்டிகைக் கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து, விண்ணப்பித்துள்ள பட்டாசு வியாபாரிகள் அனைவருக்கும் உரிமம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்னும் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைப் போராட்டத்திற்குத் தூண்ட வேண்டாம் என்றும் திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: crackers
ShareTweetSendShare
Previous Post

சோகத்தில் பாகிஸ்தான் : 402 ரன்கள் இலக்கு !

Next Post

ஆட்சியில் இருக்கும்போதே சூதாட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள்: ஸ்மிருதி இரானி தாக்கு!

Related News

சிவகிரி அருகே கோயில் கட்டுமான பணியின் போது கல் மண்டபம் இடிந்து விழுந்தது!

கர்நாடகா : ஆட்டோ ஓட்டுநரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்!

டிராக்டரில் நெல்லுடன் வந்து விவசாயிகள் சாலை மறியல்!

ஹிமாச்சல பிரதேசம் : ஜெ.பி. நட்டா தலைமையில் மூவர்ணக்கொடி பேரணி!

உருமாறிய கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்து நிற்போம் : பிரதமர் மோடி

ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது : வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

வரும் 4-ம் தேதி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

கேட்ஜெட்ஸ்களை விற்க அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொடங்கிய கூகுள்!

அணு ஆயுத ஒப்பந்த முன்மொழிவை ஈரானுக்கு அனுப்பிய அமெரிக்கா!

சென்னை : வாக்கத்தானில் பங்கேற்ற உள்நாட்டு, வெளிநாட்டு வகை நாய்கள்!

மேட்டூர் அருகே பாஜக-வினர் சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!

கள்ளக்குறிச்சி : அண்ணன், தம்பிக்கு இடையே தொடரும் சொத்து தகராறு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies