சோகத்தில் பாகிஸ்தான் : 402 ரன்கள் இலக்கு !
Nov 4, 2025, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோகத்தில் பாகிஸ்தான் : 402 ரன்கள் இலக்கு !

நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 401 ரன்களை எடுத்துள்ளது.

Web Desk by Web Desk
Nov 4, 2023, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.

இருவரும் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் பந்தை பௌண்டரிசாக அடித்து வெளுத்தனர். இதில் 10 வது ஓவர் முடிய டெவோன் கான்வே 6 பௌண்டரிஸுடன் 39 பந்துகளில் 35 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

புலி ஆட்டமிழந்த பின்னர் சிங்கம் காலத்தில் இறங்கியது போல டெவோன் கான்வே போனபின்பு கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.

பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்கள் என்று வெளுத்துவங்கிய வில்லியம்சன் 35 வது ஓவரில் 10 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 79 பந்துகளில் 95 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சதம் எடுக்க தவறினாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க தவறவில்லை நம் வில்லியம்சன்.

இவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா 15 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர்களுடன் மொத்தமாக 94 பந்தில் 103 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களைத் தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் மார்க் சாப்மேன் களமிறங்கினர். இருவரும் அணிக்கான தங்களது பங்கை சிறப்பாக அளித்து வந்தனர்.

41 வது ஓவரில் டேரில் மிட்செல் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 18 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து 44 வது ஓவரில் மார்க் சாப்மேன் 7 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 27 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 25 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் சான்ட்னர் 2 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 17 பந்துகளில் 26 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு வீரரான டாம் லாதம் 2 பந்துக்களில் ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 401 ரன்களை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்களும், ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

மேலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணிக்கு எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கியுள்ளனர் மொத்தமாக 26 எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்து தாராள பிரபுவாக திகழ்கின்றனர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்.

இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 402 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: sportsnews
ShareTweetSendShare
Previous Post

செஞ்சி: 7-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

Next Post

பட்டாசு வியாபாரிகளை வஞ்சிக்கும் திமுக அரசு : அண்ணாமலை

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies