டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மதுபான ஊழல் விவகாரத்தில், பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறனர்.
குறிப்பாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு 8 மாதங்களாகச் சிறையில் உள்ளார். இந்த வழக்கில், தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிக்கியுள்ளார். இவருக்கு அமலாக்கத்துறை ‘சம்மன்’ அனுப்பிவிட்டது
ஆனால், இந்த சம்மன் சட்டப்படி செல்லாது எனக் தெரிவித்துவிட்டு, தேர்தல் பிரசாரம் செய்யக் கிளம்பி விட்டார்.
அண்மையில் , சிசோடியாவிற்கு ஜாமீன் தர மறுத்த உச்ச நீதிமன்றம், ‘பணப் பட்டுவாடா செய்ததற்கு ஆதாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றத்திலிருந்து உதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
முன்பு, ஜார்க்கண்ட் முதல்வர் சோரனுக்கு ஊழல் வழக்கில், 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உச்ச நீதிமன்றம் சென்றார். அந்த வழியை கெஜ்ரிவால் பின்பற்றுகிறார் என்கின்றனர் டெல்லி அரசியல் நோக்கர்கள்.
ஆனால், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலின்போது, அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பது உறுதியாகிவிட்டது.