எய்ம்ஸ் பற்றிப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?  - அண்ணாமலை கேள்வி!
Sep 30, 2025, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எய்ம்ஸ் பற்றிப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?  – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Nov 6, 2023, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் மாட்டுச்சந்தை வர்த்தகத்தையே முடக்கியது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எனப் பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை மணப்பாறை தொகுதியில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற மணப்பாறை முறுக்குக்கு இந்த வருடம் மார்ச் மாதம் நமது மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது.

மணப்பாறையில், 1928 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாட்டுச்சந்தை, தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்கள் அளவிலும் புகழ் பெற்றது. 100 ஆண்டுகளுக்கு முன்பு மணப்பாறையை சுற்றியுள்ள கிராமங்களில் ஆங்காங்கே சிறிய அளவில் நடைபெற்று வந்த மாட்டுச் சந்தை, தற்போது 12 ஏக்கர் அளவில் மாபெரும் சந்தையாக மாறியுள்ளது.

ஆனால் திமுக, மணப்பாறை மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான, மாயனூர் தடுப்பணையிலிருந்து பொன்னனியாறு அணை மற்றும் கண்ணூத்து அணைக்கு நீர் வரத்து, மணப்பாறை சட்டமன்றத்தில் அதிகளவு காய்கறி விளைவதால் ஒட்டன்சத்திரம் போல மிகப் பெரிய காய்கறி சந்தை, விவசாயிகளின் விலை பொருட்களுக்கு நல்ல விலை, பால்… pic.twitter.com/TDxtE6tLlF

— K.Annamalai (@annamalai_k) November 5, 2023

வாராவாரம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை மதியம் வரை நடைபெறும் மணப்பாறை மாட்டுச் சந்தையில், ஒரு நாள் மட்டுமே மூன்று கோடி முதல் ஐந்து கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இங்கு, ஜல்லிக்கட்டு மாடுகள் கூட விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டை தடை செய்து, தமிழகம் முழுவதும் மாட்டுச்சந்தை வர்த்தகத்தையே முடக்கியது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி.

திருச்சி மாவட்டத்திற்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, திருச்சி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 4,591 கோடி ரூபாய், திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு 951 கோடி ரூபாய், பிரதமரின் வீடு திட்டம் மூலமாக 45,376 பேருக்கு வீடு, 3,94,338 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,02,252 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,35,861 பேருக்கு, ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 97,097 பேருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,47,248 விவசாயிகளுக்கு, வருடம் 6000 ரூபாய், 8,018 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ளது.

ஆனால் திமுக, மணப்பாறை மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான, மாயனூர் தடுப்பணையிலிருந்து பொன்னனியாறு அணை மற்றும் கண்ணூத்து அணைக்கு நீர் வரத்து, மணப்பாறை சட்டமன்றத்தில் அதிகளவு காய்கறி விளைவதால் ஒட்டன்சத்திரம் போல மிகப் பெரிய காய்கறி சந்தை, விவசாயிகளின் விலை பொருட்களுக்கு நல்ல விலை, பால் சார்ந்த தொழிற் பண்ணைகள், காவேரி குடிநீர் சரிவர கிடைக்க ஏற்பாடு என ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.

இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர். திமுக சின்னத்தில் போட்டியிட்ட இந்த கட்சிக்கு தமிழகத்தில் இருக்கும் ஒரே வேலை, பல உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த 1998 கோவை குண்டுவெடிப்புத் தீவிரவாதிகளை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவது தான். மனிதநேயமற்ற மக்கள் கட்சி என்றுதான் அழைக்க வேண்டும்.

மணப்பாறையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. ஆனால், திமுக மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், கல்லூரி கட்டுமான பணியின் போது கிடக்கும் சரளை மண்ணுக்காக, கலனிவாசல்பட்டிக்கு அரசு கல்லூரியை மாற்றிவிட்டார்.

இன்றுவரை இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டி முடிக்கப்படவில்லை. தற்போது இந்த கல்லூரி சொந்தக் கட்டிடம் இல்லாமல், மணப்பாறை அரசுப் பள்ளியில் இயங்கி வருகிறது. எய்ம்ஸ் பற்றிப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?

புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு குடிப்பழக்கம் கேடு விளைவிக்கும் என்று, டாஸ்மாக்கில் மது விற்பனை செய்பவர், அறிவுரை கூறுவார் என்கிறார் அமைச்சர் முத்துசாமி. மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.

சென்ற ஆண்டு டாஸ்மாக்கில் சராசரியாக மதுகுடிப்போர் எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தது, தற்போது 90 லட்சமாக உயர்ந்துள்ளது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. இதுதான் திமுகவின் ஒப்பற்ற சாதனை.

தமிழ்நாட்டை முழுவதுமாக குடிநாடக மாற்றும் வரை அமைச்சர் முத்துசாமி ஓயமாட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில், இத்தகைய மக்கள் விரோத திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத் திட்டங்களை வழங்கியுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

Tags: bjp k annamalaiannamalai en mann en makkal rallydmk fails
ShareTweetSendShare
Previous Post

இலக்கை குறிபார்த்து தாக்கிய ருத்ரா ஹெலிகாப்டர்கள்: வெற்றிகர சோதனை!

Next Post

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies