டெல்லி காற்று மாசு: 50 % ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவு!
Jul 26, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி காற்று மாசு: 50 % ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 6, 2023, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசினால், அரசு மற்றும் தனியார் துறையின், 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், குழந்தைகள், பெரியவர்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக, டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால், தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காற்று தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அவசர கூட்டம் நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, டெல்லி நகருக்குள் மின்சார லாரிகளைத் தவிர அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லாத இதர வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய
கட்டுமான பணிகள் தவிர, மற்ற அனைத்து கட்டுமான பணிகளையும் தற்காலிகமாக ஒத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

6 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இணைய வழியில் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு அலுவலகங்கள், நகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதர பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Increase in air pollution in Delhidelhi air pollution
ShareTweetSendShare
Previous Post

முப்படையில் உள்ள பெண் வீரர்கள் அனைவருக்கும் பேறுகால விடுமுறை!

Next Post

தமிழக காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிடவேண்டும்! – அண்ணாமலை

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies