இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் 49 வது சதம் குறித்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவில் விளையாடியது.
இந்தப் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி சதம் எடுத்ததன் மூலம் விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சதத்தை சமன் செய்துள்ளார்.
இந்த சதத்திற்காக தான் விராட் கோலி மிகவும் நிதானமாக விளையாடி வந்தார் என்றும் இல்லையென்றால் இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்களை எட்டி இருக்கும் என்றும் ஆதலால் விராட் கோலி சுயநலவாதி என்று பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் கோலியின் 49 வது சதம் குறித்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ” இந்த வெற்றியும், சதமும் விராட் கோலிக்கு கொஞ்சம் கூடுதலாக உற்சாகம் அளிக்கும். ஏனென்றால் ஆடுகளம் ரன்கள் சேர்ப்பதற்கு சாதகமானது அல்ல. அவ்வளவு கடினமானது என்பதால் தான் 270 ரன்களே நல்ல ஸ்கோராக பார்க்கப்பட்டது” என்று கூறினார்.
மேலும் அவர், ” சரியான நேரத்தில் ஸ்ட்ரைக்கை மாற்றிக் கொண்டே இருந்தார். அதிலும் ஸ்பின்னர்கள் அட்டாக் செய்த போது, ரன்களே வரவில்லை. அப்போதும் சில ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 300 ரன்களுக்கு மேல் எடுத்து சென்றுள்ளார். அதற்கு நிச்சயம் திறமையும், பயிற்சியும் தேவை.
தென்னாபிரிக்கா அணி பவுலிங் செய்த போது, ஆடுகளத்தில் கூடுதல் உதவி கிடைத்தது. அதிக டர்ன் இருந்ததோடு மட்டுமல்லாமல், பிட்சில் பவுன்ஸும் இல்லை. எனது பார்வையில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது, ஓரளவிற்கு ஆடுகளம் பேட்டிங் செய்ய உதவியாக இருந்தது.
ஆனால் இந்திய அணி பேட்டிங்கின் போது எக்கச்சக்க டர்ன் இருந்தது. பெரிய ஷாட்களை ஆடவே முடியாது. நிச்சயம் ஸ்பின்னர்களை கவனமாக எதிர்கொண்ட விராட் கோலியை பாராட்டியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.