வரலாறு காணாத நிகழ்ச்சி ஒன்று டெல்லி மைதானத்தில் அரங்கேறியுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ள நிலையில் இன்று டெல்லியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே 38 வைத்து லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தப் போட்டியில் வரலாறு காணாத நிகழ்ச்சி ஒன்று அரங்கேறியுள்ளது. இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் மைதானத்திற்கு தவறான ஹெல்மேட் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். சரியான ஹெல்மெட் வரும் வரை ஏஞ்சலோ மேத்யூஸ் காத்துக்கொண்டிருக்க வங்கதேச வீரர்கள் விக்கெட்டிற்கு அப்பீல் செய்தனர். அதனால் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்துப் போனார்.
இப்படி டைம் அவுட் முறையில் ஆட்டமிழப்பது என்பது இதுவே முதல்முறையாகும். இலங்கை அணி ஏற்கனவே 4 விக்கெட்கள் இழந்து இருக்கும் சமயத்தில் தேவையில்லாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.