இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ரன்களை எடுத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றையப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஷங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இதில் முதல் ஓவரின் முடிவிலேயே குசல் பெரேரா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் 12 வது ஓவரில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா களமிறங்கினார். சமரவிக்ரமா மற்றும் பதும் நிஷங்கா இருவரும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தி வந்தனர்.
அப்போது 13 வது ஓவரில் பதும் நிஷங்கா 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 36 பந்துகளில் 41 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சரித் அசலங்கா வங்கதேசத்தின் பந்தை அடித்து நொறுங்கினார்.
இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்த சமரவிக்ரமா 24 வது ஓவரில் 4 பௌண்டரீஸ் என மொத்தமாக 42 பந்துகளில் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் மைதானத்திற்கு தவறான ஹெல்மேட் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். சரியான ஹெல்மெட் வரும் வரை ஏஞ்சலோ மேத்யூஸ் காத்துக்கொண்டிருக்க வங்கதேச வீரர்கள் விக்கெட்டிற்கு அப்பீல் செய்தனர். அதனால் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்துப் போனார்.
பின்னர் சரித் அசலங்கா 48 வது ஓவரில் 6 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 105 பந்துகளில் 108 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் தனஞ்சய டி சில்வா 34 ரன்களிலும், மகேஷ் தீக்ஷனா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் அடுத்து களமிறங்கிய வீரர்கள் டக் அவுட் ஆகி சென்றனர்.
இதனால் இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ரன்களை எடுத்துள்ளது.
வங்கதேச அணியின் அதிகபட்சமாக தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்களும், ஷகிப் அல் ஹசன், ஷோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்களும், மெஹதி ஹசன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.