இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. இதில் டாஸ் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் களமிறங்கினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 17 பந்துகளில் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மாலன் 10 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 74 பந்துகளில் 87 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் மொத்தமாக 6 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் என 84 பந்துகளில் 108 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கிறிஸ் வோக்ஸ் அரைசதம் விளாசினார். 5 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 45 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக பாஸ் டி லீடே 3 விக்கெட்களும், லோகன் வான் பீக் 2 விக்கெட்களும், ஆர்யன் தத் 2 விக்கெட்களும், பால் வான் மீகெரென் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் வெஸ்லி பாரேசி மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் களமிறங்கினர்.
இதில் 5 வது ஓவரில் மேக்ஸ் ஓ’டவுட் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்த களமிறங்கிய கொலின் அக்கர்மேன் டக் வுக்கு ஆனார்.
இவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த வெஸ்லி பாரேசி 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத் தொடந்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் ஸ்காட் எட்வர்ட் சற்று சிறப்பாக விளையாடி வந்தனர்.
இதில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 33 ரன்களில் ஆட்டமிழக்க ஸ்காட் எட்வர்ட் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தேஜா நிடமானுரு சற்று சிறப்பாக விளையாடி 2 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்களை அடித்து மொத்தமாக 34 பந்துகளில் 41 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் நெதர்லாந்து அணி 38 வது ஓவரில் அனைத்து விக்கெட்டும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக மொயின் அலி மற்றும் அடில் ரஷித் தலா 3 விக்கெட்களை வீழ்த்த்தினர்.
டேவிட் வில்லி 2 விக்கெட்டும் கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 108 ரன்களை அடித்து பென் ஸ்டோக்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.