திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையின் காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, பெய்து வரும கனமழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால், மாஹே, ஏனாம் போன்ற பகுதிகளில் கனமழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.