தீபாவளி பண்டிகையையொட்டி, உள்ளூர் பயணிகள் பயன் பெறும் வகையில், 12 இரயில்களில் கூடுதலாக தலா ஒரு பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனால், அலுவலகம் மற்றும் சொந்த வேலை காரணமாகப் பலர் வெளியூரில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு வந்து தீபாவளியைக் கொண்டாடும்வகையில் உள்ளூர் பயணிகளுக்கு உதவும் வகையில் பொது மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் மத்தியில் பாரதப் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பாஜக அரசும், இரயில்வே துறையும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 10, 11, 13 -ம் தேதி ஆகிய தேதிகளில் கோவை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை-கோவை எக்ஸ்பிரஸ், நவம்பர் 10- ஆம் தேதி கோவை- சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 11- ஆம் தேதி சென்னை சென்ட்ரல்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 09, 11 ஆகிய தேதிகளில் கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 10, 12 ஆகிய தேதிகளில் நாகர்கோவில்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 10, 13 ஆகிய தேதிகளில் ஈரோடு- சென்னை சென்ட்ரல் ஏற்காடு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 11, 14 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 13- ஆம் தேதி சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 14- ஆம் தேதி சென்னை எழும்பூர்- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 10- ஆம் தேதி சென்னை சென்ட்ரல்- போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ், நவம்பர் 12- ஆம் தேதி போடிநாயக்கனூர்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 12 ரயில்களில் தலா 1 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு மக்கள் நலன் கருதி சிறப்பு இரயில்கள் இயக்க உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு பயணிகளும், பொது மக்களும் மனம் உருகி நன்றி தெரிவித்தனர்.