லட்சுமி தேவியை பழிப்பதா? நிச்சயம் தண்டிக்கப்படுவான்!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சுமி தேவியை பழிப்பதா? நிச்சயம் தண்டிக்கப்படுவான்!

சமாஜ்வாடி கட்சித் தலைவருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் சாபம்!

Web Desk by Web Desk
Nov 14, 2023, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லட்சுமி தேவி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியாவுக்கு தண்டனை வழங்குவதற்கான நேரம் வந்து விட்டது. அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான் என்ரு ஸ்ரீராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியா. இவர், தேவையில்லாத கருத்துக்களைக் கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு. அந்த வகையில், ஏற்கெனவே பத்ரிநாத் கோவில் குறித்தும், இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்து மகாசபாதான் காரணம் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து கடும் விமர்சனத்துக்குள்ளானார். இந்த சூழிலில், தற்போது லட்சுமி தேவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சுவாமி பிரசாத் மௌரியா தனது எக்ஸ் பக்கத்தில் மனைவியை வழிபடுவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து, லட்சுமி தேவியின் பிறப்பு குறித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். “எந்த மதம், ஜாதி, இனமாக இருந்தாலும் சரி, உலகிலுள்ள எந்த நாடாக இருந்தாலும் சரி, எங்கேயும் குழந்தைகள் 2 கைகள், 2 கால்கள், 2 காதுகள், 2 கண்கள், 2 துளை கொண்ட மூக்கு, ஒரு பின்பகுதி, ஒரு தலை, ஒரு வயிறுடன்தான் பிறக்கின்றன.

இதுவரை 4 கைகள், 8 கைகள், 10 கைகள், 20 கைகள், 1,000 கைகள் கொண்ட குழந்தை பிறக்கவில்லை. அப்படி இருக்க, லட்சுமி தேவி மட்டும் எப்படி 4 கைகளுடன்பிறக்க முடியும்? மேலும், நீங்கள் கடவுள் லட்சுமி தேவியை வழிபட விரும்பினால், கடவுளுக்கு நிகரான உங்களது மனைவியை வழிபடுங்கள், அவருக்கு மரியாதை கொடுங்கள். ஏனெனில், வீட்டின் வளர்ச்சி, மகிழ்ச்சி, உணவு, குடும்பத்தை மிகுந்த பக்தியுடனும் சிரத்தையுடனும் பார்த்துக் கொள்வது உங்கள் மனைவிதான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது கருத்துக்கு அக்கட்சியைச் சேர்ந்தவர்களே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐ.பி.சிங் கூறுகையில், “கட்சிக்குத் தீங்கு விளைவிக்கின்ற இதுபோன்ற கருத்துகளை நிறுத்துங்கள். மௌரியாவின் கருத்துக்கு கட்சி பொறுப்பேற்காது. இது அவருடைய தனிப்பட்ட பார்வை” என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல, சுவாமி பிரசாத் மௌரியாவின் கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், “அவருடைய தண்டனைக்கான நேரம் வந்துவிட்டது. கடவுள்களும், பெண் தெய்வங்களும் மௌரியாவை விரைவில் தண்டிப்பார்கள். இதன் மூலம் தான் செய்த தவறை அவர் உணர்ந்து கொள்வார். மேலும், மௌரியா செல்லும் எல்லா இடங்களிலும் சனாதன தர்ம மக்கள் அவரை கண்டிக்க வேண்டும்” என்றார்.

மேலும், லட்சுமி தேவிக்கு 4 கைகள் இருப்பதற்கான காரணத்தை விளக்கிய தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், “லட்சுமி ராக்ஷஸ வம்சத்தைச் சேர்ந்தவள் என்பதால் 4 கைகளை கொண்டிருக்கிறார். சுவாமி பிரசாத் மௌரியா ஒரு செவிடன். நீங்கள் என்ன சொன்னாலும் அவனுக்கு புத்தி வராது. ஆனால் அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான். அவன் ஒரு மூடன். இதற்கு மேல் அவனைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: condemnBSP leaderswami prasad mauryaSriram janma boomihead priest
ShareTweetSendShare
Previous Post

வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை தேவை!

Next Post

ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜெ.பி.நட்டா பிரசாரம்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies