லட்சுமி தேவியை பழிப்பதா? நிச்சயம் தண்டிக்கப்படுவான்!
Jul 25, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சுமி தேவியை பழிப்பதா? நிச்சயம் தண்டிக்கப்படுவான்!

சமாஜ்வாடி கட்சித் தலைவருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் சாபம்!

Web Desk by Web Desk
Nov 14, 2023, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லட்சுமி தேவி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியாவுக்கு தண்டனை வழங்குவதற்கான நேரம் வந்து விட்டது. அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான் என்ரு ஸ்ரீராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியா. இவர், தேவையில்லாத கருத்துக்களைக் கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு. அந்த வகையில், ஏற்கெனவே பத்ரிநாத் கோவில் குறித்தும், இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்து மகாசபாதான் காரணம் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து கடும் விமர்சனத்துக்குள்ளானார். இந்த சூழிலில், தற்போது லட்சுமி தேவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சுவாமி பிரசாத் மௌரியா தனது எக்ஸ் பக்கத்தில் மனைவியை வழிபடுவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து, லட்சுமி தேவியின் பிறப்பு குறித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். “எந்த மதம், ஜாதி, இனமாக இருந்தாலும் சரி, உலகிலுள்ள எந்த நாடாக இருந்தாலும் சரி, எங்கேயும் குழந்தைகள் 2 கைகள், 2 கால்கள், 2 காதுகள், 2 கண்கள், 2 துளை கொண்ட மூக்கு, ஒரு பின்பகுதி, ஒரு தலை, ஒரு வயிறுடன்தான் பிறக்கின்றன.

இதுவரை 4 கைகள், 8 கைகள், 10 கைகள், 20 கைகள், 1,000 கைகள் கொண்ட குழந்தை பிறக்கவில்லை. அப்படி இருக்க, லட்சுமி தேவி மட்டும் எப்படி 4 கைகளுடன்பிறக்க முடியும்? மேலும், நீங்கள் கடவுள் லட்சுமி தேவியை வழிபட விரும்பினால், கடவுளுக்கு நிகரான உங்களது மனைவியை வழிபடுங்கள், அவருக்கு மரியாதை கொடுங்கள். ஏனெனில், வீட்டின் வளர்ச்சி, மகிழ்ச்சி, உணவு, குடும்பத்தை மிகுந்த பக்தியுடனும் சிரத்தையுடனும் பார்த்துக் கொள்வது உங்கள் மனைவிதான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது கருத்துக்கு அக்கட்சியைச் சேர்ந்தவர்களே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐ.பி.சிங் கூறுகையில், “கட்சிக்குத் தீங்கு விளைவிக்கின்ற இதுபோன்ற கருத்துகளை நிறுத்துங்கள். மௌரியாவின் கருத்துக்கு கட்சி பொறுப்பேற்காது. இது அவருடைய தனிப்பட்ட பார்வை” என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல, சுவாமி பிரசாத் மௌரியாவின் கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், “அவருடைய தண்டனைக்கான நேரம் வந்துவிட்டது. கடவுள்களும், பெண் தெய்வங்களும் மௌரியாவை விரைவில் தண்டிப்பார்கள். இதன் மூலம் தான் செய்த தவறை அவர் உணர்ந்து கொள்வார். மேலும், மௌரியா செல்லும் எல்லா இடங்களிலும் சனாதன தர்ம மக்கள் அவரை கண்டிக்க வேண்டும்” என்றார்.

மேலும், லட்சுமி தேவிக்கு 4 கைகள் இருப்பதற்கான காரணத்தை விளக்கிய தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், “லட்சுமி ராக்ஷஸ வம்சத்தைச் சேர்ந்தவள் என்பதால் 4 கைகளை கொண்டிருக்கிறார். சுவாமி பிரசாத் மௌரியா ஒரு செவிடன். நீங்கள் என்ன சொன்னாலும் அவனுக்கு புத்தி வராது. ஆனால் அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான். அவன் ஒரு மூடன். இதற்கு மேல் அவனைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: condemnBSP leaderswami prasad mauryaSriram janma boomihead priest
ShareTweetSendShare
Previous Post

வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை தேவை!

Next Post

ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜெ.பி.நட்டா பிரசாரம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies