லட்சுமி தேவியை பழிப்பதா? நிச்சயம் தண்டிக்கப்படுவான்!
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சுமி தேவியை பழிப்பதா? நிச்சயம் தண்டிக்கப்படுவான்!

சமாஜ்வாடி கட்சித் தலைவருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் சாபம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 14, 2023, 12:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லட்சுமி தேவி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியாவுக்கு தண்டனை வழங்குவதற்கான நேரம் வந்து விட்டது. அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான் என்ரு ஸ்ரீராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியா. இவர், தேவையில்லாத கருத்துக்களைக் கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு. அந்த வகையில், ஏற்கெனவே பத்ரிநாத் கோவில் குறித்தும், இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்து மகாசபாதான் காரணம் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து கடும் விமர்சனத்துக்குள்ளானார். இந்த சூழிலில், தற்போது லட்சுமி தேவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சுவாமி பிரசாத் மௌரியா தனது எக்ஸ் பக்கத்தில் மனைவியை வழிபடுவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து, லட்சுமி தேவியின் பிறப்பு குறித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். “எந்த மதம், ஜாதி, இனமாக இருந்தாலும் சரி, உலகிலுள்ள எந்த நாடாக இருந்தாலும் சரி, எங்கேயும் குழந்தைகள் 2 கைகள், 2 கால்கள், 2 காதுகள், 2 கண்கள், 2 துளை கொண்ட மூக்கு, ஒரு பின்பகுதி, ஒரு தலை, ஒரு வயிறுடன்தான் பிறக்கின்றன.

இதுவரை 4 கைகள், 8 கைகள், 10 கைகள், 20 கைகள், 1,000 கைகள் கொண்ட குழந்தை பிறக்கவில்லை. அப்படி இருக்க, லட்சுமி தேவி மட்டும் எப்படி 4 கைகளுடன்பிறக்க முடியும்? மேலும், நீங்கள் கடவுள் லட்சுமி தேவியை வழிபட விரும்பினால், கடவுளுக்கு நிகரான உங்களது மனைவியை வழிபடுங்கள், அவருக்கு மரியாதை கொடுங்கள். ஏனெனில், வீட்டின் வளர்ச்சி, மகிழ்ச்சி, உணவு, குடும்பத்தை மிகுந்த பக்தியுடனும் சிரத்தையுடனும் பார்த்துக் கொள்வது உங்கள் மனைவிதான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது கருத்துக்கு அக்கட்சியைச் சேர்ந்தவர்களே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐ.பி.சிங் கூறுகையில், “கட்சிக்குத் தீங்கு விளைவிக்கின்ற இதுபோன்ற கருத்துகளை நிறுத்துங்கள். மௌரியாவின் கருத்துக்கு கட்சி பொறுப்பேற்காது. இது அவருடைய தனிப்பட்ட பார்வை” என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல, சுவாமி பிரசாத் மௌரியாவின் கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், “அவருடைய தண்டனைக்கான நேரம் வந்துவிட்டது. கடவுள்களும், பெண் தெய்வங்களும் மௌரியாவை விரைவில் தண்டிப்பார்கள். இதன் மூலம் தான் செய்த தவறை அவர் உணர்ந்து கொள்வார். மேலும், மௌரியா செல்லும் எல்லா இடங்களிலும் சனாதன தர்ம மக்கள் அவரை கண்டிக்க வேண்டும்” என்றார்.

மேலும், லட்சுமி தேவிக்கு 4 கைகள் இருப்பதற்கான காரணத்தை விளக்கிய தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், “லட்சுமி ராக்ஷஸ வம்சத்தைச் சேர்ந்தவள் என்பதால் 4 கைகளை கொண்டிருக்கிறார். சுவாமி பிரசாத் மௌரியா ஒரு செவிடன். நீங்கள் என்ன சொன்னாலும் அவனுக்கு புத்தி வராது. ஆனால் அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான். அவன் ஒரு மூடன். இதற்கு மேல் அவனைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: condemnBSP leaderswami prasad mauryaSriram janma boomihead priest
Share
Tweet
SendShare
Previous Post

வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை தேவை!

Next Post

ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜெ.பி.நட்டா பிரசாரம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies