இறுதிவரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி!
Jan 14, 2026, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறுதிவரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 14, 2023, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளுடனான போர் இறுதிவரை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், 3,500 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் 500 பேர் உட்பட சுமார் 11,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 25,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜோர்டான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும், போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சி செய்து வருகின்றன. ஐ.நா. பொதுசபையில் கூட ஜோர்டான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் போரை நிறுத்துவது தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இதற்கு 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. இதனால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும், ஐ.நா. பொதுசபையின் தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரித்து விட்டது. எங்களது மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தை மறக்க மாட்டோம். போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அப்படி போர் நிறுத்தத்திற்கு நாங்கள் சம்மதித்தால், அது தீவிரவாதத்திடமும், தீவிரவாதிகளிடமும் நாங்கள் சரணடைந்தது போலாகிவிடும். எனவே, ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் என்பது கனவிலும் நடக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

அதன்படி, 1 மாதங்களைக் கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில், இஸ்ரேல் இராணுவத்தின் கராகல் பட்டாலியன் வீரர்களை சந்தித்துப் பேசிய நெதன்யாகு, “இது வெறும் ஆபரேஷன் அல்ல. போராளிக் குழுவால் ஏற்படும் அச்சுறுத்தலை அகற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சி. தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும். இதை நீங்கள் உணர்ந்து கொள்வது எனக்கு முக்கியம். இந்த உணர்வு வெறும் உதட்டளவில் மட்டும் இருக்கக் கூடாது. இதயம் மற்றும் மனதிலிருந்து வரவேண்டும். நாம் அவர்களை முடிக்கவில்லை என்றால், அவர்கள் மீண்டும் வருவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: IsraelHamas TerroristPM Benjamin netanyahu
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார்!: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Next Post

கடைசி லீக் போட்டியில் சிறந்த பீல்டர் யார் ?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies