இறுதிவரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி!
Sep 13, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறுதிவரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 14, 2023, 02:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளுடனான போர் இறுதிவரை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், 3,500 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் 500 பேர் உட்பட சுமார் 11,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 25,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜோர்டான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும், போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சி செய்து வருகின்றன. ஐ.நா. பொதுசபையில் கூட ஜோர்டான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் போரை நிறுத்துவது தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இதற்கு 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. இதனால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும், ஐ.நா. பொதுசபையின் தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரித்து விட்டது. எங்களது மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தை மறக்க மாட்டோம். போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அப்படி போர் நிறுத்தத்திற்கு நாங்கள் சம்மதித்தால், அது தீவிரவாதத்திடமும், தீவிரவாதிகளிடமும் நாங்கள் சரணடைந்தது போலாகிவிடும். எனவே, ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் என்பது கனவிலும் நடக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

அதன்படி, 1 மாதங்களைக் கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில், இஸ்ரேல் இராணுவத்தின் கராகல் பட்டாலியன் வீரர்களை சந்தித்துப் பேசிய நெதன்யாகு, “இது வெறும் ஆபரேஷன் அல்ல. போராளிக் குழுவால் ஏற்படும் அச்சுறுத்தலை அகற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சி. தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும். இதை நீங்கள் உணர்ந்து கொள்வது எனக்கு முக்கியம். இந்த உணர்வு வெறும் உதட்டளவில் மட்டும் இருக்கக் கூடாது. இதயம் மற்றும் மனதிலிருந்து வரவேண்டும். நாம் அவர்களை முடிக்கவில்லை என்றால், அவர்கள் மீண்டும் வருவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: IsraelHamas TerroristPM Benjamin netanyahu
Share
Tweet
SendShare
Previous Post

மக்களே உஷார்!: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Next Post

கடைசி லீக் போட்டியில் சிறந்த பீல்டர் யார் ?

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies