5 நாள் போர் நிறுத்தம்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீண்டும் நிபந்தனை!
Jul 23, 2025, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 நாள் போர் நிறுத்தம்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீண்டும் நிபந்தனை!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டால் பிணைக் கைதிகளை விடுவிப்பதாக, இஸ்ரேலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் மீண்டும் நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொலை செய்தனர்.

இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 3,500 பேர் படுகாயமடைந்தனர். இதுதவிர, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் இராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இத்தாக்குதலில் 750-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 11,500 பாலஸ்தீனியர் உயிரிழந்திருப்பதாகவும், 28,000 பேருக்கும் மேல் படுகாயமடைந்திருப்பதாகவும் காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இவர்களில் 6,500 பேர் குழந்தைகள் எனவும், 3 பேர் முதியவர்கள் எனவும் தெரிவித்திருக்கிறது. எனவே, உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தம் செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனினும், ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இதனால், 40-வது நாளாக போர் நீடித்து வருகிறது. இத்தனை நாட்களில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட முக்கிய முகாம்களை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.

இதன் காரணமாக, நாளுக்கு நாள் இஸ்ரேலின் கை ஓங்கி வருகிறது. இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க கத்தார் நாட்டின் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கு, ஹமாஸ் தீவிரவாதிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். இதற்கு இஸ்ரேல் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில், 5 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டால், பெண்கள், குழந்தைகள் உட்பட 70 பிணைக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக, ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதப்படையான அல்கசாம் ப்ரிகேட்ஸ் பிரிவின் செய்தித்தொடர்பாளர் அபு உபைதா, டெலிகிராம் மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “காஸாவில் 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70 பிணைக் கைதிகளை விடுவிக்க நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அந்தப் போர் நிறுத்தம் முழுமையானதாக இருக்க வேண்டும்.

மேலும், காஸா முனைப் பகுதியில் அனைத்துப் பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். நாங்கள் வாய்ப்பளித்து விட்டோம். ஆனால், இஸ்ரேல்தான் வேண்டுமென்றே காலதாமதம் செய்து கோரிக்கைகளை புறக்கணித்து முடிவெடுப்பதை தள்ளிப் போடுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IsraelHamasConditionreleasehostages
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்கு 15-வது தவணைத் தொகை விடுவிப்பு – மோடி அதிரடி

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நடிகர் ரஜினி !

Related News

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies