5 நாள் போர் நிறுத்தம்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீண்டும் நிபந்தனை!
Mar 15, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 நாள் போர் நிறுத்தம்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீண்டும் நிபந்தனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டால் பிணைக் கைதிகளை விடுவிப்பதாக, இஸ்ரேலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் மீண்டும் நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொலை செய்தனர்.

இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 3,500 பேர் படுகாயமடைந்தனர். இதுதவிர, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் இராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இத்தாக்குதலில் 750-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 11,500 பாலஸ்தீனியர் உயிரிழந்திருப்பதாகவும், 28,000 பேருக்கும் மேல் படுகாயமடைந்திருப்பதாகவும் காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இவர்களில் 6,500 பேர் குழந்தைகள் எனவும், 3 பேர் முதியவர்கள் எனவும் தெரிவித்திருக்கிறது. எனவே, உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தம் செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனினும், ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இதனால், 40-வது நாளாக போர் நீடித்து வருகிறது. இத்தனை நாட்களில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட முக்கிய முகாம்களை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.

இதன் காரணமாக, நாளுக்கு நாள் இஸ்ரேலின் கை ஓங்கி வருகிறது. இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க கத்தார் நாட்டின் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கு, ஹமாஸ் தீவிரவாதிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். இதற்கு இஸ்ரேல் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில், 5 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டால், பெண்கள், குழந்தைகள் உட்பட 70 பிணைக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக, ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதப்படையான அல்கசாம் ப்ரிகேட்ஸ் பிரிவின் செய்தித்தொடர்பாளர் அபு உபைதா, டெலிகிராம் மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “காஸாவில் 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70 பிணைக் கைதிகளை விடுவிக்க நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அந்தப் போர் நிறுத்தம் முழுமையானதாக இருக்க வேண்டும்.

மேலும், காஸா முனைப் பகுதியில் அனைத்துப் பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். நாங்கள் வாய்ப்பளித்து விட்டோம். ஆனால், இஸ்ரேல்தான் வேண்டுமென்றே காலதாமதம் செய்து கோரிக்கைகளை புறக்கணித்து முடிவெடுப்பதை தள்ளிப் போடுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IsraelHamasConditionreleasehostages
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்கு 15-வது தவணைத் தொகை விடுவிப்பு – மோடி அதிரடி

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நடிகர் ரஜினி !

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies