12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச்சுற்றில் இந்தியா !
Jul 23, 2025, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச்சுற்றில் இந்தியா !

Web Desk by Web Desk
Nov 16, 2023, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது. இந்தத் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா வழக்கம் போல் பவர் பிலேவில் தனது அதிரடியான ஆட்டத்தை தொடங்கினார்.

ரோஹித் சர்மா அடிக்கும் பந்து எல்லாம் சிக்சர்கள் மற்றும் பௌண்டரிசாக சென்றுக் கொண்டிருந்தன. இப்படி அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 9 வது ஓவரில் 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினர். இவருடன் தொடக்க வீரராக விளையாடி வந்த கில் தனது ரன் வேட்டையை ஆரம்பித்தார்.

சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில்லுக்கு திடீரென காலில் அடிபட்டதால் ரிடைர் ஹுர்ட் மூலம் விளையாட்டை தொடர முடியாமல் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி கூட்டணி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.

ஆரம்பத்தில் இருவரும் நிதானமாக விளையாடினாலும் போக போக இருவரும் தங்களின் அட்டகாசமான ஆட்டத்தை காண்பித்தனர்.

விராட் கோலி ஒரு பக்கம் பௌண்டரிசாக அடித்து நொறுக்க, ஸ்ரேயாஸ் ஐயர் மறுபக்கம் சிக்சர்களாக வெளுத்து வாங்கினார்.

அப்போது விராட் கோலி தனது 50 வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதற்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை கைதட்டி பாராட்டினார்.

பின்னர் விராட் கோலி 44 வது ஓவர் முடிய 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 113 பந்துகளில் 117 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 பௌண்டரீஸ் மற்றும் 8 சிக்சர்கள் என மொத்தமாக 70 பந்துகளில் 105 ரன்களை எடுத்து 49 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 20 பந்துகளில் 39 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

49 வது ஓவரில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ரிடைர் ஹுர்ட் மூலம் வெளியேறிய கில் மீண்டும் களமிறங்கினார்.

இதில் கில் 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 66 பந்துகளில் 80 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 3 விக்கெட்களும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவிந்திரா களமிறங்கினர்.

இதில் ரச்சின் ரவிந்திரா 12 ரன்களுக்கும் டெவோன் கான்வே 13 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அவர்களைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் களமிறங்கினர்.

கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இருவரும் சேர்ந்து இந்தியா நிர்ணயித்த இலக்கை நெருங்கிக்கொண்டே வந்தனர்.

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெரும் என்பது போலவே இருந்தது அப்போது களத்தில் இறங்கினார் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷமி.

33 வது ஓவரில் ஷமி வீசிய பந்தை அடித்த கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்துபோனார். கேன் வில்லியம்சன் 8 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர்கள் என மொத்தமாக 73 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் லாதம் டக் அவுட் ஆகி சென்றார். பின்னர் களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ் அபாரமாக விளையாடி வந்தார்.

அப்போதும் நியூசிலாந்து அணி வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாகவே இருந்தது அந்த சமயத்தில் பும்ரா வீசிய பந்தில் க்ளென் பிலிப்ஸ் ஆட்டமிழந்து போனார்.

க்ளென் பிலிப்ஸ் 4 போபுண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 33 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்துப் போனார்.

இவரைத் தொடர்ந்துச் சிறப்பாக விளையாடி வந்த டேரில் மிட்செல் 9 பௌண்டரீஸ் மற்றும் 7 சிக்சர்கள் என மொத்தமாக 119 பந்தில் 134 ரன்களை எடுத்து ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 49 வது ஓவரில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 327 ரன்கள் எடுத்து இறுதி வாய்ப்பை தவறவிட்டது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்களும், குலதீப் யாதவ் , பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது அபாரமாக பந்துவீசி 57 ரன்களை கொடுத்து 7 விக்கெட்களை எடுத்து முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது.

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலகக்கோப்பை போட்டியில் இறுதிசுற்றுக்கு தகுத்து பெற்றுள்ளது குறிப்பித்தக்கது.

Tags: india won cricketindian cricket teamicc world cup cricket
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபருடன் சீன அதிபர் சந்திப்பு!

Next Post

இஸ்ரேல் இராணுவம் குறித்த தவறான செய்தி!

Related News

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies