சமையல் எரிவாயு மானியம் ரூ.450: பா.ஜ.க. அதிரடி தேர்தல் வாக்குறுதி!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமையல் எரிவாயு மானியம் ரூ.450: பா.ஜ.க. அதிரடி தேர்தல் வாக்குறுதி!

பெண் குழந்தை பிறந்தால் குழந்தைகளின் பெயரில் 2 லட்சம் ரூபாய் சேமிப்பு பத்திரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 16, 2023, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உஜ்வாலா பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு மானியமாக 450 ரூபாய் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருக்கிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மிசோராம் மாநிலத்துக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கும் கடந்த 7-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும், சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதியும், தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, ஏராளமான வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி ஏராளமான இலவசங்களை அறிவித்திருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியாக பா.ஜ.க.வும் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். அவருடன், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இருந்தனர். இந்த அறிக்கையில், உஜ்வாலா பயனாளிகளுக்கு எரிவாயு மானியமாக 450 ரூபாய் வழங்கப்படும்.

2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரித்து ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும். பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகம், பை உள்ளிட்டவை வாங்குவதற்காக ஆண்டுக்கு 1,200 ரூபாய் வழங்கப்படும்.

40,000 கோடி ரூபாயில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பெண் குழந்தை பிறந்தால் குழந்தைகளின் பெயரில் 2 லட்சம் ரூபாய் சேமிப்பு பத்திரம், நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி வழங்கப்படும் என மக்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

Tags: J.P.NaddaRajastanManifesto
ShareTweetSendShare
Previous Post

பூமியில் விழுந்த சந்திரயான்-3 ராக்கெட்டின் பாகம்… நடந்தது என்ன?!

Next Post

வங்கதேசத்தில் 2024 ஜனவரி 7- இல் பொதுத்தேர்தல்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies