பூமியில் விழுந்த சந்திரயான்-3 ராக்கெட்டின் பாகம்... நடந்தது என்ன?!
Sep 30, 2025, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூமியில் விழுந்த சந்திரயான்-3 ராக்கெட்டின் பாகம்… நடந்தது என்ன?!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 07:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் பூமியில் விழுந்ததாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. திட்டமிட்டபடி, 40 நாட்களில் நிலவை சென்றடைந்த சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23-ம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தது.

இந்த நிலையில்தான், சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்திய LVM3 M4 ஏவுகணை வாகனத்தின் கிரையோஜெனிக் மேல் நிலை பகுதி, கட்டுப்பாடில்லாமல் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக, இஸ்ரோ வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “சந்திரயான்-3 ராக்கெட்டின் கிரியோஜெனிக் பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது.

விண்கலம் ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்திருக்கிறது. இந்திய நேரப்படி நேற்று மதியம் 2.42 மணியளவில் பூமியின் காற்று மண்டலப் பகுதிக்குள் நுழைந்தது. புவி மண்டல பகுதிக்குள் வந்த ராக்கெட் பாகம், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு விழுந்திருக்கலாம். வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழக்கூடிய புள்ளி கணிக்கப்பட்டது.

ஏஜென்சி விண்வெளி குப்பைகள் ஒருங்கிணைப்புக் குழு (ஐ.ஏ.டி.சி.) பரிந்துரைத்த வழிகாட்டுதல்களின்படி, பூமியின் குறைந்த சுற்றுப்பாதை பொருட்களுக்கான “25 ஆண்டு விதிக்கு” முழுமையாக இணங்கி, ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் மறு நுழைவு நிகழ்ந்தது. சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இந்த ராக்கெட் பாகத்தை செயலிழக்கச் செய்தல் மற்றும் பணிக்குப் பின் அகற்றுவது, விண்வெளி நடவடிக்கைகளின் நீண்டகால நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Chandrayan 3launch vehicleuncontrolledReentry
ShareTweetSendShare
Previous Post

ஒரே போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி !

Next Post

சமையல் எரிவாயு மானியம் ரூ.450: பா.ஜ.க. அதிரடி தேர்தல் வாக்குறுதி!

Related News

பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தனியாக கழன்றதால் பயணிகள் பீதி!

ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

விஜய்யை கைது செய்ய வேண்டும் : உங்களில் ஒருவன் அமைப்பின் தலைவர் அறிவழகன்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் – வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது!

காசா போர் நிறுத்தத்தின் முக்கிய அம்சங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டனில் சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை : இந்திய தூதரகம் கடும் கண்டனம்!

காசா போர் தொடர்பாக ட்ரம்புடன் நெதன்யாகு பேச்சுவார்த்தை – 20 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்!

சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ஆதவ் அர்ஜுனா!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies