பூமியில் விழுந்த சந்திரயான்-3 ராக்கெட்டின் பாகம்... நடந்தது என்ன?!
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூமியில் விழுந்த சந்திரயான்-3 ராக்கெட்டின் பாகம்… நடந்தது என்ன?!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 16, 2023, 07:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் பூமியில் விழுந்ததாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. திட்டமிட்டபடி, 40 நாட்களில் நிலவை சென்றடைந்த சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23-ம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தது.

இந்த நிலையில்தான், சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்திய LVM3 M4 ஏவுகணை வாகனத்தின் கிரையோஜெனிக் மேல் நிலை பகுதி, கட்டுப்பாடில்லாமல் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக, இஸ்ரோ வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “சந்திரயான்-3 ராக்கெட்டின் கிரியோஜெனிக் பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது.

விண்கலம் ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்திருக்கிறது. இந்திய நேரப்படி நேற்று மதியம் 2.42 மணியளவில் பூமியின் காற்று மண்டலப் பகுதிக்குள் நுழைந்தது. புவி மண்டல பகுதிக்குள் வந்த ராக்கெட் பாகம், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு விழுந்திருக்கலாம். வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழக்கூடிய புள்ளி கணிக்கப்பட்டது.

ஏஜென்சி விண்வெளி குப்பைகள் ஒருங்கிணைப்புக் குழு (ஐ.ஏ.டி.சி.) பரிந்துரைத்த வழிகாட்டுதல்களின்படி, பூமியின் குறைந்த சுற்றுப்பாதை பொருட்களுக்கான “25 ஆண்டு விதிக்கு” முழுமையாக இணங்கி, ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் மறு நுழைவு நிகழ்ந்தது. சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இந்த ராக்கெட் பாகத்தை செயலிழக்கச் செய்தல் மற்றும் பணிக்குப் பின் அகற்றுவது, விண்வெளி நடவடிக்கைகளின் நீண்டகால நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Chandrayan 3launch vehicleuncontrolledReentry
ShareTweetSendShare
Previous Post

ஒரே போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி !

Next Post

சமையல் எரிவாயு மானியம் ரூ.450: பா.ஜ.க. அதிரடி தேர்தல் வாக்குறுதி!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies