இறுதிப்போட்டியில் நடுவர்களாக யாரெல்லாம் செயல்பட உள்ளார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட்டுள்ளன. 3 வது முறையாக தனது சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய அணியும், 6 வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா அணியும், 20 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் நடுவர்களாக யாரெல்லாம் செயல்பட உள்ளார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோவும், போட்டி நடுவராக ஆண்டி பைகிராப்ட்டும், 3வது மற்றும் 4வது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி ஆகியோர் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.