பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிப் பெற வேண்டி 56 அடி நீளமுள்ள உலகக்கோப்பை மணல் சிற்பத்தை செய்துள்ளார்.
ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பகுதிக்கு வந்துள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி தான் விளையாடிய 10 போட்டிகளில் 10 போட்டியிலும் வெற்றிப் பெற்று அசைக்க முடியாத ஒரு அணியாக திகழ்கிறது.
மேலும் இறுதிப்போட்டியில் இந்திய அணியே வெற்றிப் பெற வேண்டும் என்று பலரும் வாழ்த்துத்தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிப் பெற வேண்டி 56 அடி நீளமுள்ள உலகக்கோப்பை மணல் சிற்பத்தை செய்துள்ளார்.
சுமார் 6 மணி நேரமாக செய்த மணல் சிற்பத்தில் 500 கிண்ணங்களையும், 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தியுள்ளார். மேலும் கிண்ணங்களை பயன்படுத்தி ‘குட் லக், டீம் இந்தியா’ என்று எழுதி தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.