ஆஸ்திரேலியா அணியை போல் அல்லாமல் இந்திய அணி யாரையும் நம்பி இல்லை. அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும்” என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட்டுள்ளன. 3 வது முறையாக இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ” இந்திய வீரர்கள் சொந்த மண்ணில் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்கள். இந்த அணி அனுபவம் வாய்ந்த அணி என்பதால் ஆர்வத்தில் புதிதாக எதையும் செய்ய தேவையில்லை.
உலகக்கோப்பையை இந்தியா தான் வெல்லும் என்ற இரசிகர்களின் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியைப் பொறுத்தவரை யார் சிறப்பாக அழுத்தம் மற்றும் பிரஷரை கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை இந்திய அணி ஒரு வீரரையோ அல்லது இரண்டு வீரர்களையோ நம்பி இல்லை. இந்திய அணியை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் 8 முதல் 9 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதுதான் இந்திய அணியின் சிறப்பு.
ஆஸ்திரேலியா அணியை போல் அல்லாமல் இந்திய அணி யாரையும் நம்பி இல்லை. அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும்” என்று தெரிவித்தார்.