ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பகுதிக்கு வந்துள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்றது.
இந்நிலையில் இதுவரை உலகக் கோப்பையை வென்ற அனைத்து அணியின் கேப்டன்களும் இந்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண வருமாறு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.
அந்த வகையில் இந்தியாவை பொறுத்த வரையில் மூன்று முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் 2 முறை மட்டுமே இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
முதலாவதாக 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் வெற்றிப் பெற்றது. பின்னர் 2003 ஆம் ஆண்டு கங்குலி தலைமையில் இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
பின்னர் 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்தியா தனது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது. ஆகையால் இந்திய வீரர்களில் கபில்தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி வருவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மற்ற அணிகளை பொறுத்த வரையில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளனர்.