முதல்வர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!
Oct 3, 2025, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக விவசாயிகளை வஞ்சித்து வரும் மு.க.ஸ்டாலின், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பி. ஆர். பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்பப் பெற்றதை ஏற்றுக் கொள்கிறோம்.

அதே நேரத்தில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அருள் மீது போடப்பட்ட வழக்கை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது விவசாயிகளுடைய ஒற்றுமையை, அரசியல் உள்நோக்கத்தோடு பிரித்தாளும் சூழ்ச்சியாகும்.

குண்டர் சட்டம் போடப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை செயல்பட்டுள்ளது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதே நேரத்தில், வழக்கை திரும்பப் பெறுவதற்கு அந்த மாவட்டத்தைச் சார்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மூலம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பெறப்பட்டுள்ள கடிதம் விவசாயிகளின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் விவசாயிகள் ஒப்புதல் இன்றி 18 மாவட்டங்களில், ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர் வழி பாதைகளை மாற்றம் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 உடனே திரும்பப் பெற வேண்டும்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒட்டு மொத்த தமிழக விவசாயமும் நிலத்தடி நீரும் நீராதாரத் திட்டங்களும் குடிநீர் ஆதாரமும் அடியோடு பறிபோகும் பேராபத்து ஏற்படும்.

தமிழக அரசின் இந்தத் தவறான நடவடிக்கையைக் கண்டித்து வரும் 21 -ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும், 29 -ம் தேதி சென்னையில் உண்ணாவிரதமும் நடத்தப்படும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் செயல்படும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தான் செய்த தவறுகளை உணர்ந்து , தானே முன்வந்து பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: cm stalinpr pandian
ShareTweetSendShare
Previous Post

ஹலால் சான்று பெற்ற உணவுகளுக்கு தடை : உ.பி. அரசு அதிரடி!

Next Post

ஓடும் இரயில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் – சிறையில் அடைப்பு!

Related News

11 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா – சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி!

கடினமான சூழல்களை தகர்த்தெறிந்து அனைவரின் நம்பிக்கையை பெற்ற ஆர்எஸ்எஸ் – ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் புகழாரம்!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் – ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் – ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு – சென்னையில் கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

குலசேகரன்பட்டினம் தசரா விழா – சூரசம்ஹாரம் கோலாகலம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் – இந்தியா அபாரம்!

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies