முதல்வர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!
Jan 14, 2026, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2023, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக விவசாயிகளை வஞ்சித்து வரும் மு.க.ஸ்டாலின், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பி. ஆர். பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்பப் பெற்றதை ஏற்றுக் கொள்கிறோம்.

அதே நேரத்தில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அருள் மீது போடப்பட்ட வழக்கை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது விவசாயிகளுடைய ஒற்றுமையை, அரசியல் உள்நோக்கத்தோடு பிரித்தாளும் சூழ்ச்சியாகும்.

குண்டர் சட்டம் போடப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை செயல்பட்டுள்ளது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதே நேரத்தில், வழக்கை திரும்பப் பெறுவதற்கு அந்த மாவட்டத்தைச் சார்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மூலம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பெறப்பட்டுள்ள கடிதம் விவசாயிகளின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் விவசாயிகள் ஒப்புதல் இன்றி 18 மாவட்டங்களில், ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர் வழி பாதைகளை மாற்றம் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 உடனே திரும்பப் பெற வேண்டும்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒட்டு மொத்த தமிழக விவசாயமும் நிலத்தடி நீரும் நீராதாரத் திட்டங்களும் குடிநீர் ஆதாரமும் அடியோடு பறிபோகும் பேராபத்து ஏற்படும்.

தமிழக அரசின் இந்தத் தவறான நடவடிக்கையைக் கண்டித்து வரும் 21 -ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும், 29 -ம் தேதி சென்னையில் உண்ணாவிரதமும் நடத்தப்படும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் செயல்படும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தான் செய்த தவறுகளை உணர்ந்து , தானே முன்வந்து பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: cm stalinpr pandian
ShareTweetSendShare
Previous Post

ஹலால் சான்று பெற்ற உணவுகளுக்கு தடை : உ.பி. அரசு அதிரடி!

Next Post

ஓடும் இரயில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் – சிறையில் அடைப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies