உலகக்கோப்பை இறுதிப்போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு!
Sep 6, 2025, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை அடித்துள்ளது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 241 ரன்கள் இலக்கு.

ஒரு நாள் உலகக்கோப்பையில் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பட கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இவர்களில் ரோஹித் சர்மா சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்துகொண்டு வந்தார். அப்போது மறுமுனையில் இருந்த கில் 7 பந்துகளில் 4 ரன்களுக்கு மிட்சேல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி மிட்சேல் ஸ்டார்க் பந்தில் 7 வது ஓவரில் ஹாட்ரிக் பௌண்டரீஸ் ( 4,4,4 ) அடித்து அசத்தினார். அப்போது மறுமுனையில் இருந்த ரோஹித் சர்மா சிக்சர்களாக அடித்து வந்தார்.

கடைசியாக ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளை போலவே 4 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 31 பந்துகளில் 47 ரன்களுக்கு கிளென் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 1 பௌண்டரீஸ் அடித்து 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கே.எல். ராகுல் களமிறங்கினார்.

ராகுல் மற்றும் விராட் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தது. இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி 57 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்தார்.

பின்னர் 29 வது ஓவரில் பாட் கம்மின்ஸ் பந்தில் 4 பௌண்டரீஸ் என மொத்தமாக 63 பந்தில் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா சற்று நிதானமாக விளையாடி வந்தார்.

அப்போது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் 86 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்தார். அப்போது கோலியின் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா 9 ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். அரைசதம் எடுத்த கே.எல்.ராகுல் 42 வது ஓவரில் மிட்சேல் ஸ்டார்க் பந்தில் 1 பௌண்டரி என மொத்தமாக 107 பந்தில் 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் நிதானமாக விளையாடி வந்து 18 பந்துகளிலும் அவருடன் விளையாடி வந்த ஷமி ஒரு பௌண்டரி அடித்து 6 ரன்களும் ஆட்டமிழக்க பின்பு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதில் முகமது சிராஜ் ஒரு பௌண்டரி அடித்தார், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை அடித்துள்ளது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்களும், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்களும் ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 241 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: india vs Australiaicc world cup cricket
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : ராஜ்நாத்சிங்!

Next Post

துபாயில் கொட்டித்தீர்த்த மழை!

Related News

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies