அருணாச்சல பிரதேசம் சாங்லாங்கில் இன்று 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. சாங்லாங் பகுதியில் இன்று மதியம் 1.48 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 44 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. இதனால் சாங்லாங் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
















