பழங்குடி மக்களின் வளர்ச்சி இல்லாமல், வளர்ச்சி முழுமையடையாது! - குடியரசுத் தலைவர்
Aug 15, 2025, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடி மக்களின் வளர்ச்சி இல்லாமல், வளர்ச்சி முழுமையடையாது! – குடியரசுத் தலைவர்

Web Desk by Web Desk
Nov 21, 2023, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பதம்பஹார் ரயில் நிலையத்தில் மூன்று ரயில்களைக் குடியரசுத் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ஒடிசா மாநிலம், பதம்பஹார் ரயில் நிலையத்திலிருந்து பதம்பஹார் – டாடாநகர் மெமு உள்பட  மூன்று புதிய ரயில்களைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

புதிய ரைரங்பூர் அஞ்சல் பிரிவையும் அவர் மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார்; ரைரங்பூர் அஞ்சல் கோட்டத்தின் நினைவு சிறப்பு உறை வெளியிடப்பட்டது; இந்த நிகழ்வில் பதம்பஹார் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், 

எந்தவொரு பிரதேசத்தின் அபிவிருத்தியும் அந்தப் பிரதேசத்தின் இணைப்பை பொறுத்தே அமைகின்றது எனக் குறிப்பிட்டார். ரயில், சாலை, அஞ்சல் சேவைகள் என அனைத்து சேவைகளும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன.

ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற அண்டை மாநிலங்களுக்குப் பயணிக்க உள்ளூர்வாசிகளுக்கு இன்று தொடங்கப்பட்ட மூன்று ரயில்கள் உதவும் என்று கூறினார். ஒடிசாவின் தொழில் நகரமான ரூர்கேலாவுக்குச் செல்வதில் மக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது என்று கூறினார்.

செல்பேசி மற்றும் கூரியர் சேவைகளின் போக்கு அதிகரித்த போதிலும், இந்தியா போஸ்ட் அதன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை என்று கூறினார். ரைரங்பூரில் புதிய அஞ்சல் பிரிவின் திறப்பு விழா இப்பகுதிக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகும். இதன் மூலம் இப்பகுதி மக்கள் தபால் சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பழங்குடி சமூகங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறினார். 2013-14 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஒப்பிடும்போது நடப்பு பட்ஜெட்டில் சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பழங்குடி மக்களின் வளர்ச்சி இல்லாமல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முழுமையடையாது என்று கூறினார். அதனால்தான் பழங்குடி சமூகங்களின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.

பழங்குடி இளைஞர்கள் அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்தினார். சுய வளர்ச்சிக்கு ஒருவரின் முயற்சியும் அவசியம் என்று  கூறினார். எனவே, இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு அரசு பி.எம் ஜன்மனை (பிரதமர் – ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்) அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

பழங்குடி சகோதர சகோதரிகளின் முன்னேற்றத்திற்கு இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என்று கூறினார்.  இந்த அமிர்த  கால வளர்ச்சியுடன் மக்களை இணைக்கும் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின், குடியரசுத் தலைவர் பதம்பஹரில் இருந்து ராய்ரங்க்பூருக்கு பதம்பஹார் – ஷாலிமார் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

வெற்றி தோல்வி இயற்கையானது : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Next Post

புதிய மின் இணைப்பு பெற வீட்டு உரிமையாளரின் என்ஓசி தேவையில்லை!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies