பழங்குடி மக்களின் வளர்ச்சி இல்லாமல், வளர்ச்சி முழுமையடையாது! - குடியரசுத் தலைவர்
Jan 14, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடி மக்களின் வளர்ச்சி இல்லாமல், வளர்ச்சி முழுமையடையாது! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பதம்பஹார் ரயில் நிலையத்தில் மூன்று ரயில்களைக் குடியரசுத் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ஒடிசா மாநிலம், பதம்பஹார் ரயில் நிலையத்திலிருந்து பதம்பஹார் – டாடாநகர் மெமு உள்பட  மூன்று புதிய ரயில்களைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

புதிய ரைரங்பூர் அஞ்சல் பிரிவையும் அவர் மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார்; ரைரங்பூர் அஞ்சல் கோட்டத்தின் நினைவு சிறப்பு உறை வெளியிடப்பட்டது; இந்த நிகழ்வில் பதம்பஹார் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், 

எந்தவொரு பிரதேசத்தின் அபிவிருத்தியும் அந்தப் பிரதேசத்தின் இணைப்பை பொறுத்தே அமைகின்றது எனக் குறிப்பிட்டார். ரயில், சாலை, அஞ்சல் சேவைகள் என அனைத்து சேவைகளும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன.

ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற அண்டை மாநிலங்களுக்குப் பயணிக்க உள்ளூர்வாசிகளுக்கு இன்று தொடங்கப்பட்ட மூன்று ரயில்கள் உதவும் என்று கூறினார். ஒடிசாவின் தொழில் நகரமான ரூர்கேலாவுக்குச் செல்வதில் மக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது என்று கூறினார்.

செல்பேசி மற்றும் கூரியர் சேவைகளின் போக்கு அதிகரித்த போதிலும், இந்தியா போஸ்ட் அதன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை என்று கூறினார். ரைரங்பூரில் புதிய அஞ்சல் பிரிவின் திறப்பு விழா இப்பகுதிக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகும். இதன் மூலம் இப்பகுதி மக்கள் தபால் சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பழங்குடி சமூகங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறினார். 2013-14 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஒப்பிடும்போது நடப்பு பட்ஜெட்டில் சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பழங்குடி மக்களின் வளர்ச்சி இல்லாமல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முழுமையடையாது என்று கூறினார். அதனால்தான் பழங்குடி சமூகங்களின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.

பழங்குடி இளைஞர்கள் அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்தினார். சுய வளர்ச்சிக்கு ஒருவரின் முயற்சியும் அவசியம் என்று  கூறினார். எனவே, இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு அரசு பி.எம் ஜன்மனை (பிரதமர் – ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்) அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

பழங்குடி சகோதர சகோதரிகளின் முன்னேற்றத்திற்கு இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என்று கூறினார்.  இந்த அமிர்த  கால வளர்ச்சியுடன் மக்களை இணைக்கும் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின், குடியரசுத் தலைவர் பதம்பஹரில் இருந்து ராய்ரங்க்பூருக்கு பதம்பஹார் – ஷாலிமார் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

வெற்றி தோல்வி இயற்கையானது : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Next Post

புதிய மின் இணைப்பு பெற வீட்டு உரிமையாளரின் என்ஓசி தேவையில்லை!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies