ஞானவாபி மசூதி வழக்கு: நவம்பர் 28-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
Jan 14, 2026, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி வழக்கு: நவம்பர் 28-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 21, 2023, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் மேற்கொண்ட அறிவியல்பூா்வ ஆய்வின் இறுதி அறிக்கையை நவம்பர் 28-ம் தேதி சமர்ப்பிக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தில் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டு என்று இந்துக்களும், இந்து அமைப்புகளும் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக, இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் கார்பன் டேட்டிங் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால், இதற்கு மசூதி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியது.

இதையடுத்து, மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இதற்கும் தடை கோரி மசூதி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. எனவே, மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜூலை 24-ம் தேதி தொல்லியல் துறை தனது ஆய்வைத் தொடங்கியது. இந்த ஆய்வின்போது, மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, விரிவான ஆய்வு நடத்த ஏதுவாக கூடுதல் அவகாசம் கோரி தொல்லியல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆய்வுக்கான காலக்கெடு அக்டோபர் 6-ம் தேதி நிறைவடைந்த நிலையில், மேலும் 4 வாரங்களுக்கு காலக்கெடுவை நீட்டித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பிறகு, இந்த வழக்கு நவம்பா் 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மசூதியில் ஆய்வு நிறைவடைந்து விட்டதாகவும், அறிக்கையை தொகுக்க வேண்டியிருப்பதால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் தொல்லியல் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நவம்பா் 17-ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. ஆனால், தொல்லியல் துறை சார்பில் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், வாரணாசி நீதிமன்ற நீதிபதியோ 10 நாட்கள் மட்டும் அவகாசம் அளித்து உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, நவம்பர் 28-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

Tags: surveyGnanavabi MosqueArchaeology
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் ஒரு புதிய விதிமுறை!

Next Post

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை: ஜெ.பி.நட்டா!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies