ஞானவாபி மசூதி வழக்கு: நவம்பர் 28-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
Aug 3, 2025, 06:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி வழக்கு: நவம்பர் 28-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் மேற்கொண்ட அறிவியல்பூா்வ ஆய்வின் இறுதி அறிக்கையை நவம்பர் 28-ம் தேதி சமர்ப்பிக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தில் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டு என்று இந்துக்களும், இந்து அமைப்புகளும் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக, இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் கார்பன் டேட்டிங் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால், இதற்கு மசூதி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியது.

இதையடுத்து, மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இதற்கும் தடை கோரி மசூதி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. எனவே, மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜூலை 24-ம் தேதி தொல்லியல் துறை தனது ஆய்வைத் தொடங்கியது. இந்த ஆய்வின்போது, மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, விரிவான ஆய்வு நடத்த ஏதுவாக கூடுதல் அவகாசம் கோரி தொல்லியல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆய்வுக்கான காலக்கெடு அக்டோபர் 6-ம் தேதி நிறைவடைந்த நிலையில், மேலும் 4 வாரங்களுக்கு காலக்கெடுவை நீட்டித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பிறகு, இந்த வழக்கு நவம்பா் 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மசூதியில் ஆய்வு நிறைவடைந்து விட்டதாகவும், அறிக்கையை தொகுக்க வேண்டியிருப்பதால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் தொல்லியல் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நவம்பா் 17-ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. ஆனால், தொல்லியல் துறை சார்பில் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், வாரணாசி நீதிமன்ற நீதிபதியோ 10 நாட்கள் மட்டும் அவகாசம் அளித்து உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, நவம்பர் 28-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

Tags: Gnanavabi MosqueArchaeologysurvey
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் ஒரு புதிய விதிமுறை!

Next Post

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை: ஜெ.பி.நட்டா!

Related News

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies