புதிய சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர்: நாடாளுமன்றக் குழு ஒப்புதல்!
Mar 15, 2026, 09:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர்: நாடாளுமன்றக் குழு ஒப்புதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டு வரப்படவிருக்கும் 3 சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்திருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக புதிதாக 3 சட்டங்களை கொண்டு வர பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, 1860-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய தண்டனை சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா என்றும், 1898-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம், பாரதிய நாகரிக் சன்ஹிதா என்றும், 1872-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய சாட்சிகள் சட்டம், பாரதிய சாக் ஷயா அதீனியம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

இச்சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.  எம்.பி. பிரிஜ்லால் தலைமையிலான உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

அந்த அறிக்கையில், “இச்சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டதில் எந்த சட்ட விதிமீறல்களும் இல்லை. அரசியல் சாசனத்தின் 348-வது பிரிவின்படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பயன்படுத்தும் மொழியாகவும், சட்டங்கள், மசோதாக்கள் மற்றும் பிற சட்ட ஆவணங்களில் பயன்படுத்தும் மொழியாகவும் ஆங்கிலம் இருக்க வேண்டும்.

அந்த வகையில், தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் அதன் பெயர்கள் ஆங்கிலத்திலேயே எழுதப்படுகின்றனவே தவிர, ஹிந்தியில் எழுதப்படவில்லை. மேலும், இச்சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைத்தாலும், அவை ஆங்கிலத்திலேயே எழுதப்படும். ஆகவே, இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Tags: 3 new billsParliament committee
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை!

Next Post

குஜராத்தின் காந்திநகருக்குக் குடியரசு துணைத்தலைவர் பயணம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies