கொட்டித் தீர்த்த கனமழை: வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் – மக்கள் கடும் அவதி!
Jul 23, 2025, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொட்டித் தீர்த்த கனமழை: வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் – மக்கள் கடும் அவதி!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த தொடர் கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தது. நள்ளிரவில், கிட்டத்தட்ட 3 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக, அன்னை சத்யா நகர் மற்றும் மல்லி நகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வீடுகளில் புகுந்த வெள்ளநீரால், மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. மாணவர்களின் பாடப் புத்தகங்கள் மழை நீரில் நனைந்தது.

வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை மக்கள் வாலியால் இறைத்து வெளியேற்றி வருகின்றனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நசியனூர் அருகே உள்ள சாமிகவுண்டன் பாளையம் பகுதிகளில் இருக்கும் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: heavy rain
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 63.04 அடியாக அதிகரிப்பு!

Next Post

ஹவாய் தீவு : கடலில் பாய்ந்த விமானம்!

Related News

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

மத்திய பிரதேசம் : கிணற்றில் விழுந்த புலி பத்திரமாக மீட்பு!

மருத்துவமனையில் இருந்தபடி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

நிறைவான அம்சங்களுடன் கிடைக்கும் OPPO K13 X!

இயல்பாக நடக்க பயிற்சி மேற்கொண்ட சுபன்ஷு சுக்லா!

புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்!

லண்டன் : அமைதியாக எதிர்விணை ஆற்றிய இஸ்கான் அமைப்பினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies