"ரோஹித் சர்மாவை போல் செயல்பட போகிறேன்" - சூரியகுமார் யாதவ்!
Jul 23, 2025, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ரோஹித் சர்மாவை போல் செயல்பட போகிறேன்” – சூரியகுமார் யாதவ்!

Web Desk by Web Desk
Nov 23, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 உலக கோப்பையில் நாங்கள் அடைந்த தோல்வி மிகவும் வலியை கொடுத்ததாகவும் அதிலிருந்து மீண்டு வர இன்னும் நாட்கள் தேவைப்படும் என்று சூரியகுமார் யாதவ், கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறயுள்ளது.

இதில் முதல் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் இரவு தொடங்கவுள்ளது. மேலும் இந்த தொடரில் சூரியகுமார் தலைமையிலான இந்திய இளம் வீரர்கள் அணி களமிறங்கவுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூரியகுமார் யாதவ், உலக கோப்பையில் நாங்கள் அடைந்த தோல்வி மிகவும் வலியை கொடுத்ததாகவும் அதிலிருந்து மீண்டு வர இன்னும் நாட்கள் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர், நம் தோல்விக்கு பிறகு அடுத்த நாள் எழுந்து அனைத்தையும் மறந்து விட முடியாது. அது மிகவும் கஷ்டம். ஏனென்றால் இது நீண்ட தொடராக நடந்தது. இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெறவே விரும்பினோம்.

ஆனால் நாளையும் சூரியன் உதிக்கும். இருளுக்கு முடிவில் நிச்சயம் வெளிச்சம் வரும். நாம் அதில் சிக்கி விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.

டி20 போட்டியை பொருத்தவரை முற்றிலும் புதிய வீரர்கள் தான் களமிறங்குகிறார்கள். இதனால் இந்த சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். உலகக்கோப்பை தொடரில் நாங்கள் பெருமைப்படும் அளவில்தான் செயல்பட்டோம்.

வீரர்கள் பலரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினார்கள். நேர்மறையான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடினோம். ரோகித் சர்மா ஒரு கேப்டனாக வீரர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.

உலகக்கோப்பை தொடரின் போது நாங்கள் வேறொரு ரோகித் சர்மாவை பார்த்தோம். அவர் என்ன பேசினாரோ அதை தான் செய்தார். அணி ஆலோசனை கூட்டத்தில் என்ன பேசினாரோ அதை தான் மைதானத்திலும் செய்தார்.

ரோகித் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உலகக்கோப்பையில் செய்ததை நாங்கள் டி20 கிரிக்கெட்டிலும் செய்வோம் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

மேலும் அவர், ” இன்று மதியம் தான் நான் வீரர்களை சந்தித்தேன். அவர்களிடம் பயமின்றி தைரியமாக விளையாடுங்கள் என்று கூறினேன். களத்திற்கு செல்லும் போது தனிப்பட்ட சாதனைகளை யோசிக்காமல் அணிக்காக விளையாடும் வீரராக நான் இருப்பேன்.

அதை தான் வீரர்களுக்கும் சொன்னேன். உங்களை விட அணி தான் முக்கியம் என்பதை நினையுங்கள் என்றேன். அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் இனிவரும் அனைத்து போட்டிகளும் மிகவும் முக்கியம்.

இஷான் கிஷன் எங்கள் அணியில் இருக்கிறார். அவர் நன்றாக செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்று சூரிய குமார் யாதவ் கூறினார்.

Tags: india vs AustraliaSurya kumar yadavt20
ShareTweetSendShare
Previous Post

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி!

Next Post

மக்களே உஷார்: 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Related News

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies