பாரதம் உலகத்துக்கு வழிகாட்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
Mar 15, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதம் உலகத்துக்கு வழிகாட்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாய்லாந்து நாட்டில் நடந்த உலக இந்து மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கொரோனா காலத்திற்குப் பிறகு மனிதர்கள் மறுபரிசீலனை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். பாரதம் வழி காட்டும் என்று ஒருமனதாக நினைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ‘உலக இந்து மாநாடு 2023’ இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றுகையில், “உலகம் ஒரே குடும்பம். அனைவரையும் ஒரே கலாச்சாரமாக்குவோம்.

ஜடவாத மகிழ்ச்சிக்கான அனைத்து வழிகளையும் கையகப்படுத்த, மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார்கள். இதை நாமும் அனுபவித்திருக்கிறோம். இன்றைய உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2,000 ஆண்டுகளாக மகிழ்ச்சி, பேரின்பம் மற்றும் அமைதியைக் கொண்டுவர மனிதர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜடவாதம், கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் போன்ற முயற்சிகளைக் கையாண்டனர். மேலும், பல்வேறு மதங்களையும் பின்பற்றினார்கள். ஆனால், அவர்கள் பொருட்களின் செழிப்பை அனுபவித்தனரே தவிர, திருப்தியும், மகிழ்ச்சியும்,ந நிம்மதியும் கிடைக்கவில்லை.

இந்த சூழலில், கொரோனா காலத்திற்குப் பிறகு மனிதர்கள் மறுபரிசீலனை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். பாரதம் வழி காட்டும் என்று ஒருமனதாக நினைக்கிறார்கள். அதற்கான பாரம்பரியம் பாரதத்தில் இருக்கிறது. மேலும், இதை பாரதம் முன்னரே செய்திருக்கிறது. அதோடு, இந்த நோக்கத்திற்காகத்தான் நமது சமூகமும், நமது நாடும் உருவாகி இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உலக முஸ்லீம் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பாரதத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் தனது உரைகளில், உலகில் நல்லிணக்கம் நிலைத்திருக்க வேண்டுமானால், பாரதம் அவசியம் என்று கூறினார். இதுதான் நமது கடமை. இதற்காகத்தான் இந்து சமுதாயம் உருவானது” என்றார்.

இம்மாநாட்டில், மாதா அமிர்தானந்தமயி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, விஞ்ஞானியும் எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன், வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றுகிறார்கள்.

தவிர, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறங்காவலர் மற்றும் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஏ ஷா, பாரதத்தின் மிகப்பெரிய மருத்துவ சாதன உற்பத்தியாளர்களும் ஸ்கன்ரே டெக்னாலஜி நிறுவனர்களுமான விஸ்வபிரசாத் ஆல்வா, ஸ்டான்போர்ட் உள்ளிட்ட வல்லுநர்களின் பேச்சுக்களும் இடம்பெறுகின்றன.

அதேபோல, பல்கலைக்கழக பேராசிரியர் அனுராக் மைரல், நேபாள கோடீஸ்வரர் உபேந்திரா மஹதோ, பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் ஃபகர் ஷிவா கச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

Tags: thailandWorld Hindu ConferenceMohan Bahawat
ShareTweetSendShare
Previous Post

“என் மண், என் மக்கள்” நான்காம் கட்ட யாத்திரை

Next Post

தொடர் மழை எதிரொலி – ஊட்டி மலை இரயில் சேவை ரத்து

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies