ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு !
Jan 15, 2026, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பண்டிட் கேசவ் என்ற நபர் உலகக்கோப்பை மீது கால் வைத்து இந்திய கிரிக்கெட் இரசிகர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி மிட்செல் மார்ஷ் மீது புகார் கொடுத்துள்ளார்.

ஒரு நாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆனால் இரசிகர்களுக்கு தோல்வியடைந்த வலியை விட மிகப்பெரிய வலி ஒன்றை ஒருவரின் செயல் ஏற்படுத்திவிட்டது.

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக்கோப்பையின் மீது கால் வைத்து அமர்ந்திருந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை பார்த்து இந்திய இரசிகர்கள் எவ்வாறு நீ அதில் கால் வைக்கலாம் என்று போர் கொடி தூக்கி வருகிறார்கள்.

நாங்கள் இந்த உலகக்கோப்பையை எப்படி எல்லாம் நினைத்தோம் தெரியுமா? அதில் போய் நீ கால் வைக்கிறாயே என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பண்டிட் கேசவ் என்ற நபர் உலகக்கோப்பை மீது கால் வைத்து இந்திய கிரிக்கெட் இரசிகர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி மிட்செல் மார்ஷ் மீது புகார் கொடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மிச்சல் மார்ஷ் மீது எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த புகார் மனுவின் பிரதியை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அந்த நபர் அனுப்பி வைத்திருக்கிறார். இந்திய இரசிகர்களின் மனதை புண்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிச்செல் மார்ஷ் இனி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க கூடாது என்று அவர் அந்த மனுவில் வலியுறுத்தி இருக்கிறார்.

உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் கால் வைத்தது சமூக வலைத்தளத்தில் கலவையால் விமர்சனமே பெற்றது. அது வெறும் கோப்பை என்றும் அதற்கு மரியாதை தேவை இல்லை என்றும் சக மனிதர்களுக்கு தான் நாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் இரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் உலகக்கோப்பைக்கு என்று ஒரு மரியாதை இருக்காதா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் உலகக்கோப்பையில் மிட்செல் மார்ஸ் கால் வைத்தது தம் மனதுக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி கூறியிருக்கிறார்.

கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்ற செயலை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். சாதாரண ஒரு புகைப்படம் எடுத்து தற்போது இந்தியாவில் வழக்குப்பதிவு செய்யும் அளவிற்கு இந்த விஷயம் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: sports
ShareTweetSendShare
Previous Post

டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு முட்டுக்கட்டை

Next Post

வீரமரணமடைந்த வீரர்கள்: இராணுவம் அஞ்சலி!

Related News

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies