உலகக்கோப்பையின் பொருளாதாரத்தில் இந்தியா வென்றதா ? தோற்றதா ?
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பையின் பொருளாதாரத்தில் இந்தியா வென்றதா ? தோற்றதா ?

இந்தியா உலகக்கோப்பையில் தோல்வியடைந்தாலும் பொருளாதார ரீதியா இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் பொருளாதார ரீதியாக இந்தியா வெற்றியை பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் என்பது உலகெங்கிலும் உள்ள அணிகள் மற்றும் இரசிகர்களை ஈர்க்கும் ஒரு உலகளாவிய நிகழ்வு. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இப்போட்டியை காண ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த இந்த உலகக்கோப்பை மூலமாக இந்தியாவிற்கு தோராயணமாக ரூ.22,000 கோடி வருவாய் வந்துள்ளதாக பேங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பயணம், உணவு, சில்லறை விற்பனை, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் என அனைத்திலும் இப்போட்டியின் தாக்கம் உச்சம் தொட்டது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் ஆர்வலர்களின் வருகை பயணத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. அதேபோல் தங்கும் விடுதிகள், கெஸ்ட் ஹவுஸ், ஹோட்டல் என அனைத்தும் பொருளாதார ரீதியாக உச்சம் தொட்டது என்றே சொல்லலாம்.

அதேபோல் கிரிக்கெட் போட்டியை மைதானத்தில் கண்டுகளிக்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். அதிலும் இந்திய அணியின் போட்டிக்கு நுழைவு சீட்டு வாங்க போட்டிப் போட்டனர்.

இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் இரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இது உலக சாதனையாக மாறியுள்ளது. கடந்த 2015யில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரை 1,016 மில்லியன் ரசிகர்கள் நேரில் பார்த்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடர் முறியடித்துள்ளது.

இந்த சாதனை டிக்கெட் விற்பனையிலிருந்து நேரடி வருவாய்க்கு பங்களித்து அது மட்டுமல்லாமல் உணவு, ரசிகர்களுக்கான ஜெர்சி, பிற பொருட்கள் என மைதானத்தில் வருவாய் உயர்ந்தது.

மேலும் தொலைக்காட்சியில் பார்வையிடுபவர்கள், டிஜிட்டலில் பார்வையிடுபவர்கள் என அனைத்திலும் உலகக்கோப்பை தொடர் சாதனை மேல் சாதனை படைத்தது என்றே சொல்லலாம்.

அதிக பார்வையாளர்கள் மற்றும் இரசிகர்களின் ஈடுபாடு விளம்பரதாரர்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும் பொன்னான வாய்ப்பை வழங்கியது.

பல்வேறு துறைகளில் உள்ள பிராண்டுகள் உலகக்கோப்பை போட்டியை பயன்படுத்தி அதிக பார்வையாளர்களைச் சென்றடையச் செய்தன, இது விளம்பரச் செலவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தது.

விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் வருவாயில் ஏற்பட்ட இந்த எழுச்சி போட்டியின் பொருளாதார தாக்கத்திற்கு முக்கிய பங்களிப்பாக இருந்தது.

போட்டியின் பொருளாதார தாக்கம் உள்ளூர் வணிகங்கள் பெரிதும் நன்மை அளித்தது. போட்டி நடைபெற்ற நகரங்களில் விற்பனையாளர்கள், உள்ளூர் உணவகங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் என உள்ளூர் பொருளாதாரங்களுக்கு உலகக்கோப்பை தொடர் பங்களித்தது.

மேலும், போட்டி நடத்தும் நகரங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை தூண்டியது, ஸ்டேடியம் மேம்பாடுகள் மற்றும் நகர்ப்புற அழகுபடுத்தும் திட்டங்கள் உட்பட, உள்ளூர் சமூகங்களுக்கு நீண்ட கால பலன்கள் உள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் வருகை உள்ளூர் மற்றும் தேசிய வரி வருவாய்க்கு பங்களித்தன. இதன் மூலம் இந்தியா உலகக்கோப்பையில் தோல்வியடைந்தாலும் பொருளாதார ரீதியா இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது.

Tags: sports
ShareTweetSendShare
Previous Post

ஆட்சிக்கு வந்தால் “ஐதராபாத்” பெயர் மாற்றப்படும்: பா.ஜ.க. அதிரடி!

Next Post

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies